களிலும், மார்புஉம் - மார்பிலும், வேண்டிய ஆறு - வேண்டியபடியெல்லாம் [மிக அதிகமாக என்றபடி], சோரிவீழ்தர - இரத்தம் பெருகும் படி, பொருத பின்னர் - போர்செய்தபின்பு, துரோணன் மைந்தன் தூண்டிய- அசுவத்தாமன் பிரயோகித்த, தொடை ஒன்றால் - அம் பொன்றினால், தான்உம் வீழ்ந்தான் - தானும் இறந்துவிழுந்தான்; (எ -று.)- வேண்டியவாறு பொருதபின்ன ரென்று இயைப்பினுமாம். (209) 119.-பாண்டியன்இறக்கவே பாண்டவசேனையார் வென்னிட, மற்றையோர் கடுமையாகப் பொருதல். பட்டனன் முனிவன் கையிற் பஞ்சவ னென்று வேந்தர் கெட்டனர் முரசந் தீட்டுங் கேதனன் சேனை யுள்ளார் தொட்டனர் வரிவில் வாளி தொடுத்தன ரடுத்து மேன்மேல் விட்டனர் வேந்தர் வேந்தன் சேனையில் வேந்த ருள்ளார். |
(இ-ள்.) 'முனிவன் கையின் - அசுவத்தாமனது கையால், பஞ்சவன் - பாண்டியன், பட்டனன் - இறந்தான்,' என்று-, முரசம் தீட்டும் கேதனன் சேனை உள்ளார் - முரசத்தை யெழுதிய கொடியையுடைய தருமனது சேனையிலுள்ளவர்களான, வேந்தர் - அரசர்கள், கெட்டனர் - வலியழிந்தார்; வேந்தர் வேந்தன் சேனையில் உள்ளார் - துரியோதனனது சேனையிலுள்ளவரான, வேந்தர் - அரசர்கள், (பாண்டியனிறந்தானென்றுகளித்து), வரி வில் தொட்டனர் - கட்டமைந்த வில்லை எடுத்து, வாளி தொடுத்தனர் - பாணங்களைத் தொடுத்து, மேல்மேல் அடுத்து விட்டனர் - மேலே மேலே நெருங்கி விட்டார்கள்;(எ-று.) 'பட்டனன் முனிவன்கையிற்பஞ்சவனென்று' என்னுங் காரணத்தைப் பின்வாக்கியத்தோடுங் கூட்டுக. கெட்டனர் - காணாமலோடினாரென்றுமாம். (210) வேறு. 120.-அசுவத்தாமன்முன் சோழன் றோன்றுதல். விற்கையா ரியன்மகன் விசும்பின் வீழ்தரு முந்தையா மெனவிடு மொளிகொள் வாளியாற் கொற்கையா னிறந்தபின் கோழி யானெனுஞ் சொற்கையா மனுகுலத் தோன்ற றோன்றினான். |
(இ-ள்.) வில் கை - வில்லேந்திய கையையுடைய, ஆரியன் மகன் - ஆசாரியபுத்திரனான அசுவத்தாமா, விசும்பின் வீழ்தரும் உற்கை ஆம் என - ஆகாயத்தினின்று விழுகிற எரிகொள்ளி போல, விடும் - விட்ட, ஒளி கொள் வாளியால் - ஒளியைக்கொண்ட அம்பினால், கொற்கையான் - கொற்கையென்னும் ஊரையுடைய பாண்டியன், இறந்தபின்-,-கோழியான் எனும் - சோழனென்கிற, சொல்கையா - சொல் வெறுக்காத, மனு குலம் தோன்றல் - மனு மரபில் தோன்றியஅரசன், தோன்றினான் - வந்தான்; (எ - று.) |