பக்கம் எண் :

116பாரதம்கன்ன பருவம்

126.புகலருமறையவன்புராரியாதியாந்
திகழொளியிமையவர்சிறப்பினீந்தன
விகன்முனைமுனையுறவெதிர்ந்துதள்ளே

யகல்வெளிபுதைத்தனவம்புமம்புமே.

     (இ-ள்.) புகல் அரு - (சிறப்பித்துச்) சொல்லுதற்கு அரிய, மறையவன் -
அசுவத்தாமன், புராரி ஆதி ஆம் - சிவன்முதலான, திகழ் ஒளி இமையவர் -
விளங்குகிற ஒளியையுடைய தேவர்கள், சிறப்பின் ஈந்தன - சிறப்பாகக் கொடுத்த
அஸ்திரங்களை, இகல் முனை - போர்க்களத்தில், முனை எதிர்ந்து உற - முன்னே
எதிர்ந்து செல்லும் படி, தள்ள - பிரயோகிக்க,- அம்புஉம் அம்புஉம் - (இருவர்)
அம்புகளும், அகல் வெளி புதைத்தன - பரந்த ஆகாயவெளியை மறைத்தன; (எ-
று.)-மிக அடர்த்தியாகப் பரவின, ஈந்தனவாகிய அம்பும் அம்பும் என்று இயைத்து
உரைப்பாருமுளர்.                                               (217)

127.சுரருலகெய்தியதுரோணன்மைந்தனை
யிருகணைபுயத்தினுமிரண்டுமார்பினு
மொருகணைநுதலினுமுரவவேவினான்
மருவிரிதாதகிவாசமாலையான்.

     (இ - ள்.) மரு விரி - தேனொழுகுகிற, வாசம் - வாசனையுடைய, தாதகி
மாலையான் - ஆத்திப்பூமாலையையுடைய சோழன்,-சுரர் உலகுஎய்திய - (இறந்து)
தேவலோகத்தை அடைந்த, துரோணன் - துரோணரது, மைந்தனை - புத்திரனான
அசுவத்தாமனை, இரு கணை - இரண்டு அம்புகள், புயத்தின்உம் - தோள்களிலும்,
இரண்டு - இரண்டு அம்புகள், மார்பின்உம் - மார்பிலும், ஒரு கணை - ஓரம்பு,
நுதலின்உம் - நெற்றியிலும், உருவ - துளைக்கும்படி, ஏவினான் - எய்தான்;
(எ-று.)                                                      (218)

128.பிறைமுடிச்சடையவன்பிள்ளைவள்ளுகிர்
விறலுடைப்புலிக்கொடிவீரன்மெய்யெலாம்
புறவினுக்கரிந்தநாட்போலமேல்விடுந்
திறலுடைவாளியாற்சிவப்பித்தானரோ.

     (இ -ள்.) பிறை முடி சடையன் - இளஞ்சந்திரனை யணிந்த திரு
முடியிலுள்ள(கபர்த்தமென்னுஞ்) சடையையுடையஉருத்திரனது, பிள்ளை -
மகனானஅசுவத்தாமன், வள் உகிர் - கூர்மையானநகங்களையும், விறல் உடை -
வெற்றியையுமுடைய, புலி - புலியையெழுதிய, எலாம் - உடம்பு முழுவதையும்,
மேல்விடும் - மேலே பெய்கிற, திறல் உடை - வலிமையையுடைய, வாளியால் -
அம்புகளினால், புறவினுக்கு அரிந்த நாள் போல - புறாவைக் காக்கும் பொருட்டு
அறுத்துக் கொடுத்த காலத்திலேபோல, சிவப்பித்தான் - சிவக்கச்செய்தான்; (எ-று.)-
அரோ- ஈற்றசை.

     பிள்ளை- இளமைப்பெயர்; "தவழ்பவை தாமு மவற்றோரன்ன" என்னுந்
தொல்காப்பியச்சூத்திரத்தில் 'தாமும்' என்றதனால், இது உயர்திணைக்கும்
உரியதாதல்கொள்ளப்படும்.
சோழனுஞ் சிபியும்