பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்131

வேறு.

157.-அப்போது துரியோதனன்சேனை வென்னிடல்.

மன்னற் கிளையோனை வாட்டரும னுக்கிளையோன்
றுன்னிப் பிளந்து சுரருலக மேற்றுதலுங்
கன்னற்கு மற்றுள்ள காவலர்க்கு நில்லாமல்.
வென்னிட்ட தம்மன்னன் வீரப் பெருஞ்சேனை.

     (இ-ள்.) மன்னற்கு இளையோனை - துரியோதனன் தம்பியை, வாள்
தருமனுக்கு இளையோன் - ஒளியையுடைய தருமனது தம்பி,  துன்னி - நெருங்கி,
பிளந்து-, சுரர் உலகம் ஏற்றுதலும்-தேவலோகத்தை யடையச் செய்தவளவில்,-அ
மன்னன்-அத் துரியோதனனது, வீரம் பெருசேனை - வீரத்தன்மையையுடைய
பெரியசேனையானது, கன்னற்குஉம் - (சேனாபதியான) கர்ணனுக்கும். மற்று உள்ள
காவலர்க்குஉம் - மற்றுமுள்ள அரசர்களுக்கும், நில்லாமல்-(தடுக்கவுந்)
தடைப்பட்டுநிற்காமல், வென்இட்டது-முதுகுகொடுத்து ஓடிற்று; (எ - று,)

     இதுமுதல் இருபத்தொருகவிகள் - பெரும்பாலும் வெண்டளையால் வந்த
நாற்சீர் நான்கடிக்கொச்சகக்கலிப்பாக்கள்.                          (248)

158.- வீமன் துச்சாதனனைக் கொன்றது கண்டு
க்ருஷ்ணார்ச்சுனர் முதலோர் உடன்கூடுதல்

வண்டாரவாரமறாதநறும்பூந்துளபத்
தண்டார்முடியோனும்விற்கைத்தனஞ்சயனுங்
கண்டாரவர்முதலாங்காவலருங்கைகலந்தார்
வெண்டாரகைபரந்தவிண்ணொத்ததாகவமே.

     (இ-ள்.) வண்டு் ஆரவாரம் அறாத - வண்டுகளின் பேரொலி நீங்காத,
நறு -வாசனை வீசுகிற, பூ - அழகிய, தண் - குளிர்ந்த, துளபம் -
திருத்துழாயினாலாகிய,தார் - மாலையையுடைய, முடியோன்உம் - முடியையுடைய
கண்ணணும், வில் கைதனஞ்சயன்உம் - வில்லைப்பிடித்த கையையுடைய 
அருச்சுனனும், அவர் முதல் ஆம் காவலர்உம் - அவர்முதலிய அரசர்களும்,
கண்டார் - (வீமன் துச்சாதனனைக்கொன்றதைப்)பார்த்து, கைகலந்தார் - உடன்
கூடினாராக, ஆகவம் -(பாண்டவசேனை நின்ற) போர்க்களம், வெண் தாரகைபரந்த
விண் - வெண்மையானநட்சத்திரங்கள் பரவிய ஆகாயத்தை, ஒத்தது-; (எ- று.)

     கைகலந்தார் என்பது முற்றெச்சமாய், கைகலக்க வென்னும் பொருள் தந்து
நின்றது; இதனை முற்றாகவேகொண்டு பொருளுரைத்தால், ஏகவாக்கியமாகாது
பின்னவாக்கியமாகும்.                                             (249)

159.-வீமன் திரௌபதி கூந்தலைப்பற்றியவை இவையென்று மீண்டுந்
துச்சாதனன் கைவிரல்பத்தையுந் துணித்தல்.

வேகமிகுஞ்செந்தீயின்மேனாளவதரித்த
தோகைகுழலுந்துகிலிமுடன்றொட்டனவென்