றாகமுறப்பிளந்தவாண்டகைமீண்டவ்வீரன் பாகமுறுகைவிரல்கள்பத்துந்துணித்தானே, |
(இ-ள்) ஆகம் உற பிளந்த - துச்சாசனனுடம்பை நன்றாகக்கீண்ட, ஆண்தகை -ஆண்மைக்குணமுள்ள வீமன், அ வீரன் - வீரனாகிய அத்துச்சாசனனது, பாகம்உறு கை விரல்கள் பத்துஉம் - கூறாகப்பொருந்திய கைகளின் பத்துவிரல்களையும்,'(இவை), வேகம் மிகும் செம் தீயில் உக்கிரத்தன்மை மிகுந்த செம்மையாகியநெருப்பில், மேல் நாள் அவதரித்த - முன்னே பிறந்த, தோகை மயில் போலுஞ்சாயலையுடைய திரௌபதியின், குழல்உம் - கூந்தலையும் துகில்உம் -சேலையையும், உடன் தொட்டன - ஒருங்கேதொட்ட குற்றமுடையவையாம்,' என்று- என்றுஎண்ணி, மீண்டு - மறுபடியும், துணித்தான் - தனித்தனி அறுத்தான்;(எ-று.) (250) 160.-துச்சாதனனிரத்தத்தை வீமன் குடிக்கப்புகக் கிருஷ்ணன் தடுத்தல். தண்ணீர்நிகரெனத்துச்சாதனன்றன்மெய்யிலிழி புண்ணீர்பருகப்புகுவோனையாவருக்குங் கண்ணீர்வரத்தடுத்தான்காணுங்காலெத்திறத்தும் வெண்ணீர்மையில்லாதமேகந்தனைப்போல்வான். |
(இ-ள்.) காணுங்கால்-பார்க்குமிடத்தில், எ திறத்துஉம் - எல்லாவகையாலும், வெண் நீர்மை இல்லாத மேகந்தனை போல்வான்- வெண்ணிறமில்லாத (மிகக்கரிங்) மேகத்தை ஒப்பவனாகிய கண்ணபிரான், துச்சாதனன்தன் மெய்யில் இழி புண்நீர் - துச்சாதனனுடம்பிலிருந்து வழிகிற இரத்தத்தை, தண் நீர் நிகர் என-குளிர்ந்த நீரை ஒக்கு மென்னும்படி, பருக புகுவோனை - குடிக்கத் தொடங்குகிற வீமனை, யாவருக்குஉம் கண் நீர் வர - எல்லோர்க்கும் (இரக்கத்தால் கண்களில்) நீர்வருவதைநோக்கி, தடுத்தான் - (குடிக்கவேண்டாமென்று) தடைசெய்தான்;(எ- று.) கருநிறத்தாலும் கைம்மாறு கருதாது கருணைமழைபொழிதலாலும் காத்தற்றொழிலாலும் குளிர்ச்சியினாலும்ஒத்திருத்தலால், 'எத்திறத்தும் மேகந்தனைப் போல்வான்' என்றார். (251) 161.-துச்சாதனன்குருதியைக் கொப்பளித்து என் எண்ணம் முற்றியதென்று வீமன் கூத்தாடுதல். குடியாமலக்குருதிகொப்பளித்துவாகை முடியாநின்றென்னெண்ணமுற்றினனென்றாங்கட் படியாளுஞ்செங்கோன்மைப்பார்த்திவருக்கெல்லாங் கொடியார்மடங்கலெனக்கூத்தாடிநின்றார்த்தான். |
(இ-ள்.) (வீமன்), -குடியாமல் அ குருதி கொப்பளித்து- (வாயிற்கொண்ட) அவ்விரத்தத்தை(க் கண்ணன் வார்த்தையினாற்) பருகாமல் உமிழ்ந்துவிட்டு, வாகை முடியாநின்று - வெற்றிமாலையைச் சூட்டிக்கொண்டு நின்று ஆங்கண் - அவ்விடத்திலுள்ள, |