பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்133

படி ஆளும் செங்கோன்மை - பூமியை ஆளுகிற அரசாட்கிமுறையின்
தன்மையையுடைய, பார்த்திவருக்கு எல்லாம் - அரசர்களிடத்தெல்லாம், என்
எண்ணம் முற்றினன் என்று - எனது நினைப்பை நிறை வேற்றினனென்று சொல்லி,
கொடி ஆர்மடங்கல் என - (தன்) கொடியிற் பொருந்திய சிங்கம்போல, கூத்தாடி
நின்று ஆர்த்தான் - கூத்தாடிக்கொண்டு ஆரவாரித்து நின்றான். (எ - று.)    (252)

162.- துச்சாதனன் ஒன்பதுதம்பிமாரோடும் இறந்தமையை
வீமன் கூறிச்செருக்குதல்.

துன்பமுறுந்துன்னீதித்துச்சாதனன்போர்செய்
தொன்பதின்மர்தம்பியரோடும்பரூர்புக்கானென்
றன்புடையதம்முனடிவீழ்ந்தகங்கரித்தான்
வன்புடையதாதையினுமிக்கவலியோனே.

     (இ-ள்.) வன்பு உடைய - வலிமையையுடைய, தாதையின்உம் - தன்
தந்தையாகிய வாயுவைப்பார்க்கிலும், மிக்க வலியோன் - மிகுந்த
வலிமையையுடையவீமன், 'துன்பம் உறும் - (பிறர்க்குத்) துன்பத்தைத் தருகிற,
துன் னீதி - கெட்டநியாயங்களையுடைய, துச்சாதனன்-,போர்செய்து-,ஒன்பதின்பர்
தம்பியரோடு -ஒன்பது பேர்தம்பிமாருடனே, உம்பர் ஊர்புக்கான் -தேவலோகத்தை
அடைந்தான், 'என்று - என்றுசொல்லி, அன்பு உடைய தம்முன்-அன்பையுடைய
தமையனாகிதருமனது, அடி வீழ்ந்து-திருவடிகளில் (வந்து) விழுந்து (நமஸ்கரித்து),
அகங்கரித்தான் - செருக்குக்கொண்டுகளித்தான்; (எ - று.)-துன்னீதி - அநியாயம்:
துர்நீதி யென்பதன் விகாரம்;  சுநீதிஎன்பதன் எதிர்மொழி.               (253)

163.-பாண்டவசேனை தருக்கியிருப்பதுகண்டும் கர்ணன்
தன்சேனையோடு எதிர்க்காமல் வாளாவிருத்தல்.

பாண்டவர்கள்சேனைமதிகண்டபௌவமெனக்
காண்டவமன்றுண்டகனல்போனனிதருக்கி
மூண்டநிலைகண்டுமுதுகிடுதன்சேனையுடன்
மீண்டுமெதிரூன்றாமல்வெய்யோன்மகனின்றான்.

     (இ-ள்.) வெய்யோன் மகன் - வெப்பத்தையுடைய சூரியனது குமாரனான
கர்ணன், பாண்டவர்கள் சேனை-, மதி கண்ட பௌவம் என - பூர்ணசந்திரனைப்
பார்த்த கடல்போலவும், அன்று காண்டவம் உண்ட கனல்போல் - அந்நாளிற்
காண்டவவனத்தை உணவாகக் கொண்ட அக்கினிபோலவும், நனிதருக்கி-மிகவுஞ்
செருக்குக்கொண்டு, மூண்ட நிலை - மேல்வந்த விதத்தை, கண்டுஉம் - பார்த்தும்,
முதுகு இடு - புறங்கொடுத்துப்போகிற, தன் சேனையுடன் - தனது சேனையுடனே,
மீண்டுஉம் எதிர் ஊன்றாமல் - மீளவும் எதிரே சென்று போர்செய்யாமல்,
நின்றான் -வாளாவிருந்தான்; (எ-று.)                              (254)