பக்கம் எண் :

134பாரதம்கன்ன பருவம்

164.-வாளாவிருத்தற்குக் கர்ணனையிடித்துக்கூறிச்
சல்லியன் தேரைச் செலுத்தலுறல்.

மேல்கொண்டுபாண்டவர்தம்வெஞ்சேனைசூழ்ந்திடவு
மால்கொண்டவர்போலமாண்டாயோயெனக்கழறிக்
கால்கொண்டதிண்டேர்கடாவினான்கையளவு
கோல்கொண்டான்கன்னனுமக்கூற்றுக்கெதிர்கூறும்.

     (இ-ள்.) கை உளவுகோல் கொண்டான் - கையிற் குதிரை யோட்டுங்
கோலைக்கொண்ட சாரதியாகிய சல்லியன்,-(கன்னனை நோக்கி), 'வெம் - கொடிய,
பாண்டவர்தம் சேனை-, மேல்கொண்டு - மேலேவந்து, சூழ்ந்திடஉம் -
சுற்றிக்கொள்ளவும், (எதிர்சொல்லாமல்), மால் கொண்டவர் போல -
மயக்கங்கொண்டவர்கள்போல, மாண்டாய்-(வலி) அழிந்தாய்,' என கழறி என்று
இடித்துச்சொல்லி,-கால் கொண்ட திண்தேர் - சக்கரங்களைக்கொண்ட வலிய
தேரை,கடாவினான் - செலுத்தினான்; கன்னனும்-, அ கூற்றுக்கு எதிர் கூறும் -
அச்சல்லியனது வார்த்தைக்கு உத்தரஞ்சொல்லுவானாயினான்; (எ -று,) - அது
மேற்கவியிற் கூறுகின்றார். கூற்று - கூறப்படுவது;  சொல், மாண்டாய், மாள் -
பகுதி.                                                     (255)

165.-கர்ணன் 'துச்சாதனனிறந்த சோகத்தாலிருந்த நிலை
இது' என்று சமாதனாங் கூறுதல்.

வேந்தனனையவிறற்றம்பிவீமன்கை
மாய்ந்தநிலைகண்டுமனந்தளர்ந்ததல்லாது
கூர்ந்ததிறன்மத்திரத்தார்கோவேவொருவுமோ
பாந்தளெதிர்செல்லப்பறவைக்கரசென்றான்.

     (இ-ள்.) 'கூர்ந்த திறல் - மிகுந்தவலிமையையுடைய, மத்திரத்தார் கோவே -
மத்திரநாட்டார்க்கு அரசனான சல்லியனே! வேந்தன் அனைய -
துரியோதனனைப்போன்ற, விறல்தம்பி - வலிமையையுடைய அவன் தம்பியாகிய
துச்சாதனன், வீமன் கை - வீமனதுகையினால்,  மாய்ந்த நிலை - இறந்தநிலையை,
கண்டு - பார்த்து, மனம்தளர்ந்தது அல்லாது - (யான்) மனத்தளர்ச்சிபெற்றதே
யல்லாமல், பறவைக்கு அரசு - பக்ஷிராஜனானகருடன், பாந்தள் எதிர் செல்ல -
பாம்புக்கு எதிரேபோவதற்கு, வெருவும்ஓ - அஞ்சுமோ?' என்றான் - என்று
சொன்னான்; (எ- று.)

     யான் பகைவர் முன்னே செல்லுதற்குச் சிறிதும் அஞ்சமாட்டேனென்பது
தோன்ற நின்றமையால், பின்னிரண்டடி பிறிதுமொழிதல் என்னும் அணி.   (256)

166.-கர்ணன் முதுகிட்டோரையும் துரியோதனனையும்
பேரணியாக்கிப் பகைவரை எதிர்த்தல்.

முன்னமமரின்முதுகிட்டமன்னரையு
மன்னவர்கண்மன்னனையும்வன்பேரணியாக்கிப்