பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்137

செய்த கர்ணனது, குமரன் - குமாரனாகிய விருஷசேனன், கொடுகணையால் -
(தனது)  கொடுமையான அம்புகளால், மண்டு கனல் அருந்த - எரிகின்ற நெருப்பு
உண்ணும்படி, வல் காண்டவம் - வலிய காண்டவவனத்தை, எரித்த - தகிக்கச்செய்த,
திண் திறலோன் - வலிய பராக்கிரமத்தையுடைய அருச்சுனனது, தம்பி - தம்பியான
நகுலனுடைய, தட தேர் கால்களை - பெரிய தேரின் சக்கரங்களை, அழித்தான் -
அழியச்செய்தான்; (எ-று.)                                          (262)

172.மற்றொருதேரேறிமருத்துவர்தம்மைந்தனுமக்
கொற்றநெடுங்கச்சைக்கொடியோன்றிருமைந்தன்
வெற்றிவிலோதனமும்வெஞ்சாபமுமுடனே
யற்றுவிழவெய்தானவனாண்மைக்காரெதிரெ.

     (இ-ள்.) மருத்துவர் தம் மைந்தன்உம் - அசுவினீதேவர்களது மகனான
நகுலனும், மற்று ஒரு தேர் ஏறி - வேறொருதேரில் ஏறிக்கொண்டு, கொற்றம்
வெற்றிக்கு அடையாளமான, நெடு - நீண்ட, கச்சை கொடியோன் -
கச்சையினுருவத்தை யெழுதிய கொடியையுடைய கர்ணனது, அ திரு மைந்தன் -
மேன்மையான மகனாகிய அவ்விடசேனனது, வெற்றி விலோதனம்உம் -
ஜயத்துக்குஅடையாளமான கொடியும், வெம் சாபம்உம் - கொடியவில்லும்,
உடனே அற்று விழ- விரைவிலே அறுபட்டு விழும்படி, எய்தான் - அம்பெய்தான்;
அவன்ஆண்மைக்கு ஆர் எதிர் - அந்நகுலனது பராக்கிரமத்திற்கு எவர் தாம் 
எதிராவார்?(எ- று.)-எவரும் எதிராகாரென்றபடி,

     மருத்துவர் - மருந்தை அறிந்தவர்: வைத்தியர் என்றபடி; இவர், தேவ
வைத்தியர், கச்சை-கஷ்யா: யானையின் வயிற்றிற்கட்டுங் கயிறு.             (263)

173.மீண்டவனும்வேறொருவின்மேருவெனவாங்கிப்
பாண்டவனைவீழும்படியெய்தான்வீழ்ந்தோனை
மூண்டவனற்செங்கண்முரண்வீமன்கொண்டேகக்
காண்டவநீறாக்கினான்கண்டானவன்போரே.

     (இ-ள்.) அவன்உம் - விடசேனனும், மீண்டு - மீளவும், வேறு ஒரு வில்-
மற்றொரு வில்லை, மேரு என - மேருமலையைப்போல, வாங்கி,- எடுத்து
வளைத்து,பாண்டவனை - நகுலனை, வீழும்படி-(மூர்ச்சித்துக்கீழே) விழும்படி,
எய்தான் -அம்பெய்தான்; வீழ்ந்தோனை - (அங்ஙனம்) விழுந்த நகுலனை, அனல்
மூண்ட -நெருப்புப்பொறி எழும்பப்பெற்ற, செம் கண் - (கோபத்தாற்) சிவந்த
கண்களையும,முரண் - வலிமையையு முடைய,  வீமன்-, கொண்டு ஏக - எடுத்துக்
காண்டவவனத்தைச் சாம்பலாக்கின அருச்சுனன், அவன் போர் - அவ்விடசேனனது
போரை, கண்டான்; (எ - று.)-

     பாண்டவன்- பொதுப்பெயர் இங்குச் சிறப்பாய் நின்றது. (264)