174.-விடசேனனது ஆண்மைகண்டு அருச்சுனன் அவனைக் கொல்லுமாறு செல்லுதல். நன்றூண்டிகழ்மதியாநாகம்பருமத்தா வன்றூண்டிரைமதியாவண்டர்க்கமுதளித்தோன் முன்றூண்டியதேரிற்சென்றான்முனைவாளி மின்றூண்டில்வீசிவிடசேனமீன்படுப்பான். |
(இ-ள்.) திகழ் மதி - விளங்குகிற சந்திரன், நல் தூண் ஆ - நல்லதூணாகவும்,நாகம் - (மந்திர மென்னும்) மலை, பருமத்துஆ - பருத்த மத்தாகவும், திரை -அலைகளையுடைய பாற்கடலை, மதியா - கடைந்து, அன்று - அந்நாளில்,அண்டர்க்கு-தேவர்களுக்கு, அமுது - அமிர்தத்தை, ஊண் - உணவாக, அளித்தோன் - கொடுத்தருளின கண்ணன், முன் தூண்டிய - முன்னே நின்று செலுத்தப்பெற்ற, தேரில் - தேரிலே, (அருச்சுனனாகிய வலைஞன்), முனை வாளி - கூர்மையையுடைய அம்பாகிய, மின் தூண்டில் - விளங்குகிற தூண்டிலை, வீசி - எறிந்து, விடசேனன் மீன் - விடசேனனாகிய மீனை, படுப்பான் - அகப்படுத்திக் கொல்லும்பொருட்டு, சென்றான்-;(எ- று.) "மத்து மந்தரம் வாசுகி கடைகயி றடைதூண், மெத்து சந்திரன்" என்றார், கம்பரும். தூண்டில் - மீன்பிடிக்குங் கருவியிலொன்று. விடசேனமீன் - உயர்திணையீறு விகாரமாயிற்று. அம்பைத் தூண்டிலாகவும் விடசேனனை மீனாகவும் உருவகப்படுத்தினதற்கு ஏற்ப, அருச்சுனனை 'வலைஞன்' என்னாமையால், ஏகதேசவுருவகவணி. ஊண் திரை யென்றேஎடுத்து - உணவுக்குரியபாற்கடற்றிரை யெனினுமாம். மீனைக்கூறியது துள்ளுந்தன்மைக்கேற்ப. (265) 175.-விடசேனன் கடுமையாகப் பொருதல். தம்பிபடுந்துன்பந்தமையனையுங்காண்பனென வெம்பியெதிர்சென்றுவிடசேனன்வில்வாங்கிப் பம்பிவருகொடித்தேர்ப்பார்த்தனையும்பாகனையு மம்பின்மறைத்தானடலேரியனையான். |
(இ-ள்.) அடல் - வலிமையையுடைய, அரி ஏறு - ஆண்சிங்கத்தை, அனையான் - ஒத்தவனாகிய, விடசேனன்-, 'தம்பி படும் துன்பம் - தம்பியாகிய நகுலன் அடைந்த துன்பத்தை, தமையனைஉம் காண்பன் - தமையனாகிய அருச்சுனனையும் அடையும்படி செய்வேன்,' என - என்றுஎண்ணி, வெம்பி - கோபித்து, எதிர் சென்று - எதிரே போய், வில் வாங்கி - வில்லை வளைத்து,- பம்பிவரு-நெருங்கி வருகிற, கொடி தேர் - அனுமக்கொடியைக்கொண்ட தேரையுடைய,பார்த்தனைஉம் - அருச்சுனனையும், பாகனைஉம் - அவன் சாரதியானகண்ணனையும் அம்பின் - அம்புகளினால், மறைத்தான்-; கீழ் நகுலனை மூர்ச்சித்து விழும்படி செய்ததுபோலவே இப்போது அருச்சுனனையும் விழச்செய்வேன் என்பது முதலடிக்குக் |