பக்கம் எண் :

14பாரதம்கன்ன பருவம்

குலம் என - நீர்ப்பாம்புகூட்டம்போலிருப்பவும்,- நெரிய வருவன -
நெருங்கிவருவனவாகிய, வகை படு - பலவகைப்பட்ட, மிடல் - வலிமையையுடைய,
அணி - வரிசைகள், நிமிர எழுவன - உயர்ந்து எழுவனவாகிய, நிரை கெழு திரை
என - ஒழுங்குபொருந்திய அலைகள்போலிருப்பவும்,- விருதர் - காலாள்வீரர்கள்,-
விரிவின் - பரப்பிலே, அளவு அறு -ஓரளவில்லாத, சலநிதி - கடல், நிகர் என -
உவமை யென்னும்படி, வெகுளி மிகுகதி கடுகினர் - கோபம்மிக்கநடையுடனே
விரைந்துசென்றனர்; (எ-று.)

     பவனசம் பவநாஸம் என்பதன் விகாரம்; காற்றை யுண்பது என்று பொருள்.
                                                            (23)

24.- வாத்தியகோஷ வருணனை.

முரசுகரடிகைகிணைதுடிபெருமர முருடுபடுபறைமுதலியகருவிக,
ளரசவரிவளைகொடுவயிரெழுகுழலரவவிருதுகண்முதலியகருவிக,
ளுரைசெய்கருவிகண்முழுவதுமெழுவகையுலகமுடிவுறவுக
                                     விறுதியிலெழு,
கரைசெய்கடலெனவெறிவளியெனமிசை கஞசலியுருமெறிகன
                                     மெனவதிரவே.

இதுமுதல் மூன்றுகவிகள் குளகம்.

     (இ-ள்.) முரசு - பேரிகையும், கரடிகை-, கிணை-, துடி-, பெருமரம்-, முருடு-,
படு - (என்று) சொல்லப்படுகின்ற, பறை - பறைகளும், முதலிய முதலான,
கருவிகள்- அடிக்கப்படுகின்ற வாத்தியங்களும்,-அரச(ர்) வரி வளை -
அரசர்கட்குஉரியகோடுகளமைந்த சங்குகளும், கொடு வயிர்- வளைந்த
ஊதுகொம்புகளும், எழுகுழல் - ஒலியெழுகின்ற வேய்ங்குழல்களும், அரவம்
விருதுகள் - ஓசையையுடையவெற்றிக்கு அடையாளமான சின்னங்களும், முதலிய -
முதலான, கருவிகள் -வாத்தியங்களும்,- முழுவதும்உம் - ஆகிய இவையெல்லாம்,-
ஏழு வகை உலகம்முடிவுற - ஏழுவகை யுலகங்களும் அழியும்படி, உகம்
இறுதியில் - யுகாந்த[பிரளய] காலத்தில், எழு - மேற்பொங்கிவருகின்ற ,
கரை செய் - ஒலித்தலைச்செய்கிற, கடல் என - கடல்போலவும், ஏறி வளி
என - வீசுகின்றபெருங்காற்றுப்போலவும், மிவை கஞலி உரும் எறி கனம் என -
ஆகாயத்தின் மேற்பரந்து இடி யிடிக்கின்ற மேகம்போலவும், அதிர - ஒலிக்க,-
(எ -று.) - இக்கவியில்'அதிர' என்ற செயவெனெச்சமும், மேற்கவியில் 'நடவ'
என்ற செயவெனெச்சமும்,அதன் மேற்கவியிலுள்ள 'பருகின' என்னும் முற்றைக்
கொண்டு முடியும்.

     கரடிகை முதலியன - பறைகளின் பேதங்கள். பெருமரம் - பெரிய
மரத்தினாலாகிய தெனக் காரணப்பெயர்.                            (24)

25.- இருதிறத்துச்சேனையும் ஒன்றோடொன்று எதிர்த்தல்.

எறியுமுரசமெரிவிழியுரகமுமெழுதுகொடியுடையவரிரு
                               படையினும்,
வெறிகொண்மதமலைகளுமதமலைகளும் விசயமிகுவன
                            விரதமு மிரதமு,
நெறிகொணவகதியிவுளியுமிவுளியுநிருதாகுலநிகர்விருதரும்