பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்145

189.எடுத்தவேல்களும்வேல்களுமுனைந்தனவிலக்குறக்கொடும்
                                       பாணந்,
தொடுத்தசாபமும்சாபமும்வளைந்தனதொடியுடைக்கரசாலத்,
தடுத்தவாளமும்வாளமும்பொருதனவங்குலிகளிற்சுற்றி,
விடுத்தநேமியுநேமியுந்துணித்தனவீரர்சென்னிகள்வீழ.

     (இ-ள்.) எடுத்த - (கையில்) எடுத்த, வேல்களும் வேல்களும்-, முனைந்தன -
போர்செய்தன;  இலக்கு உற - லட்சியத்திலே பொருந்தும்படி, கொடு பாணம் -
கொடிய அம்புகளை, தொடுத்த-, சாபம்உம்-விற்களும்-, சாபமும்-, வளைந்தன-,
தொடி உடை - தொடியென்னும் ஆபரணத்தையுடைய, கரசாலத்து - கைகளின்
கூட்டத்தில், அடுத்த - பொருந்திய, வாளம்உம் - வாள்களும், வாளமும்-,
பொருதன- போர்செய்தன; அங்குலிகளின் - விரல்களினால், சுற்றிவிடுத்த -
கழற்றிவிட்ட,நேமிஉம் - சக்கரங்களும், நேமியும்-, வீரர்சென்னிகள் வீழ-வீரர்களது
தலைகள்விழும்படி, துணித்தன - அறுத்தன; (எ - று.) இலக்கு - குறிப்பிட்ட
பொருள். பி-ம்:கரசாலம்.                                         (280)

190.-அறன்மகன்பெருஞ் சேனையி னிருபரு மரவவெங்
                             கொடியாடை,
மறன்ம கன்கொடுஞ் சேனையி னிருபரும் வஞ்சினம்
                                பலகூறித்.
திறன்மி குந்ததஞ் சேனையொ டெதிரெதிர்
                    சென்றுசென் றிடந்தோறு,
முறமலைந்தன ரொருவருக் கொருவர்தோ ளுரமும்வீ
                            ரமுமொத்தோர்.

     (இ-ள்.) ஒருவருக்கொருவர் ஒருவர் - ஒருத்தரோடொருத்தர், தோள்
உரம்உம் -புஜபலத்திலும், வீரம்உம் - பராக்கிரமத்திலும், ஒத்தோர் -
ஒத்தவர்களாகிய, அறன்மகன் பெரு சேனையில் நிருபர்உம் - தருமபுத்திரனது
பெரியசேனையிள்ளஅரசர்களும், வெம் அரவம்கொடிய பாம்பை யெழுதிய, கொடி
ஆடை -கொடிச்சீலையையுடைய, மறன்மகன் - அதருமத்தையுடைய
துரியோதனனது,கொடுசேனையில்- கொடிய சேனையிலுள்ள, நிருபர்உம் -
அரசர்களும், வஞ்சினம்பல கூறி பல சபதங்களைச் சொல்லிக்கொண்டு, திறல்
மிகுந்த தம் சேனையொடு -வலிமை மிகுந்த தமது சேனையுடனே, எதிர் எதிர்
சென்று சென்று - எதிரே எதிரே போய்ப் போய், இடம் தோறுஉம் -
இடங்கள்தோறும், உற மலைந்தனர் -நன்றாகப் போர்செய்தார்கள்;(எ - று.)-மறன்
மகன் - அதருமமுடையதிருதராட்டிரனது மகனுமாம்.                  (281)

வேறு.

191.-அருச்சுனன் தம்பிமார்முதலானாரோடு வருதல்.

இளைஞ ரும்பெருஞ் சேனையு மிருபுடை நடக்கக்
கிளைஞர் யாவரு நேமியங் கிரியெனச் சூழ
விளையும் வெஞ்சின வீமன்முன் போதர விசயன்
வளைநெ டுஞ்சிலை கணைமழை பொழிந்திட வந்தான்.

     (இ-ள்.) விசயன் - அருச்சுனன்,-இளைஞர்உம் - தம்பிமரான நகுல
சகதேவரும், சேனைஉம் - பெரிய சேனைகளும், இருபுடை