பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்147

 வேறு.

194.மருவ ருஞ்சுருதி கூறுநிலை நாலும் வழுவா
திருவ ருஞ்சிலைவ ணக்கியது மெய்த விரகு
மொருவ ருஞ்சிறிது ணர்ந்திலகு கரந்த மெனவே
வெருவ ருஞ்செயலில் விஞ்சினர்கள் விஞ்சை யருமே.

     (இ-ள்.) இருவர்உம் - கர்ணனும் அருச்சுனனும், மருவு அரு - பயிலுதற்கு
அருமையான, சுருதி - தனுர்வேதத்தில், கூறும் - சொல்லப்படுகிற, நிலைநால்உம் -
ஆலீடம் முதலிய நால்வகைநிலைகளும், வழுவாது - தவறாமல் (நின்று), சிலை
வணக்கியதுஉம் - வில்லைவளைத்ததையும், எய்த விரகுஉம் - (அம்பு)
எய்தபக்குவத்தையும், ஒருவர்உம் சிறிதுஉணர்ந்திலர் - எவருங்கொஞ்சமேனும்
அறிந்தாரில்லை; விஞ்சையர்உம் - (மேலுலகத்துள்ள) வித்தியாதரர்களும் உகாந்தம்
என - யுகமுடிவுகாலமென்று எண்ணி, வெருவரும் செயலில் விஞ்சினர்கள்-
பயப்படுந்தொழிலில் மிகுந்தார்கள்; (எ- று.)

     சுருதியென்பதற்கு -(எழுதப்படாமல் ஆசாரியசிஷ்யபரம்பரையாகக்)
கேட்கப்பட்டுவருவ தென்று பொருள், விஞ்சையர் - பதினெட்டுத்தேவகணங்களுள்
ஒருவகையார்.

     இதுமுதல் ஒன்பதுகவிகள் - பெரும்பாலும் இரண்டு மூன்றாஞ்சீர்கள்
கூவிளங்காய்ச்சீரும், மற்றவை மாச்சீர்களுமாகிய கலிநிலைத்துறைகள்.      (285)

195.ஒன்றோடொன்றுமுனையோடுமுனையுற்றுறவிழு
மொன்றோடொன்றுபிளவோடவிசையோடுபுதையு
மொன்றோடொன்றுதுணிபட்டிடவொடிக்குமுடனே
யொன்றோடொன்றிறகுகவ்வுமெதிரோடுகணையே.

     (இ-ள்.) எதிர் ஓடு கணை - எதிரேசெல்லுகிற அம்புகள், ஒன்றோடு
ஒன்று-,முனையோடு முனைஉற்று - நுனியோடு நுனிபொருந்தி, உற விழும் -
மிகுதியாகவிழும்; ஒன்றோடொன்று-, பிளவுஓட - பிளவுபடும்படி, விசையோடு
புதையும் - வேகத்தோடு தாக்கும்; ஒன்றோடொன்று-, துணிபட்டிட - துண்டு
படும்படி,ஒடிக்கும்-: உடனே - விரைவாக,  ஒன்றோடொன்று-,  இறகு கவ்வும் -
(அம்புகளின்) இறகுகளைப் பறிக்கும்; (எ - று.)                       (286)

196.இடம்புரிந்திடில்வலம்புரியுமெண்ணின்முறையால்
வலம்புரிந்திடிலிடம்புரியுமண்டலமுமாய்
நடம்பிரிந்துபவுரிக்கதிநடத்துமெதிரே
சலம்புரிந்ததிரமுட்டுமிருசந்தனமுமே.

     (இ-ள்.) எதிரே-, சலம் புரிந்து  - போர்செய்து, அதிர - அதிர்ச்சி
யுண்டாம்படி, முட்டும் - (ஒன்றோடொன்று) தாக்குகிற, இரு சந்தனம்உம் -
இரண்டுதேர்களும் எண்ணில் - ஆலோசிக்கு