பக்கம் எண் :

152பாரதம்கன்ன பருவம்

"முரசக்கொடி மன்னவன் முன்புசெல" என அடுத்த  கவியில் தொடரும்.

     அறன் - அறம் என்னும் பகுதியின்மேல் அன்விகுதிபெற்று வந்த
ஆண்பாற்பெயர்; 'ஆர்' விகுதி உயர்வுகுறிக்கவந்தது, அன்பாவது - மனைவியும்
புத்திரரும் முதலிய உறவினரிடத்துக் காதலுடையவனாதல். இறைவன் -
(எல்லாப்பொருள்களிலும் அந்தர் யாமியாய்த்) தங்குகின்றவன்; இறுத்தல் -
தங்குதல்.                                                   (295)

205. - அப்போது, இன்னும் கர்ணனைக் கொல்லாமைக்காக
அருச்சுனன்வில்லைத் தருமன் பழித்துரைத்தல்.

முகில்வண்ணணும்வாசவன்மாமகனு முரசக்கொடிமன்னவன்
                                   முன்புசெலப்,
பகலின்பதிமைந்தனையின்னமுமிப் பகல்சாய்வதன்முன்பு
                                  படுத்திலையா,
லிகவெங்ஙன்முடித்திடுநின்கையில்வில்லிது வென்னவி
                           லென்றுதிருத்தமையன்,
புகலுஞ்சொலவன்செவியிற்புகவே புண்மே
                          லயிலுற்றதுபோன்றதுவே.

     (இ-ள்.) முகில் வண்ணன்உம் - மேகம்போன்ற நிறத்தையுடைய கண்ணனும்,
வாசவன்  மா மகன்உம் - சிறந்த இந்திரகுமாரனான அருச்சுனனும், முரசம் கொடி
மன்னவன் முன்பு - முரசையெழுதிய கொடியையுடைய தருமனுக்கெதிரில், செல -
போக,- திருதமையன் - (அருச்சுனனது) மேலான தமையனான அத்தருமன்,
'இன்னமும்-, இ பகல் சாய்வதன் முன்பு - இந்தப் பகற்பொழுது கழிதற்குமுன்னே,
பகலின் பதி மைந்தனை - பகற்பொழுதுக்குத் தலைவனான சூரியனது மகனான
கர்ணனை, படுத்திலை - கொன்றாயில்லை; நின் கையில் வில் - எனது கையிற்
பிடித்தவில், இகல் - பகையை, எங்ஙன் - எவ்வாறு முடித்திடும் - அழித்துவிடும்?
இதுஎன்னவில்-?' என்று-, புகலும் - (அலட்சியமாகச்) சொன்ன, சொல் - வார்த்தை,
அவன் செவியில் புகா - அருச்சுனனது காதில் நுழையவே, புண்மேல் அயில்
உற்றது போன்றது-புண்ணில் வேல் நுழைந்தது போன்றது, (எ-று.)-மிகவருத்தம்
உண்டாக்கிற்று என்றபடி-புண் - கர்ணனைத் தருமனாகக் கண்டதானலுண்டான
தளர்ச்சிக்கும், அதன்மேல் வேல் பொருந்துதல் - தருமன் வார்த்தை
செவியுற்றதற்கும் உவமை யென அறிக.                              (296)

206.- தன்சபதப்படி வில்லைப்பழித்த தருமனைக் கொல்வேனென்று
வந்தஅருச்சுனனைக் கிருஷ்ணன் தடுத்தல்.

கூரார்முனைவாளிகொளிச்சிலையைக்குறையென்னெதிர்கூறினரம்
                                          புவிமேல்,
யாராயினுமாவிசெகுத்திடுமா லிதுவஞ்சினமாதலினிப்பொழுதே,
தாரார்புயவென்றியுதிரட்டிரனைத்தலைகொள்வனெனத்தனுவுங்குனியா,
வாராமுன்விலக்கியருச்சுனனை வருகென்றுதழீஇமதுசூதனே.

                   இதுமுதல் மூன்றுகவிகள் - ஒருதொடர்.

     (இ-ள்.) (அருச்சுனன்), 'கூர்ஆர் - கூர்மை பொருந்திய, முனை -
நுனியையுடைய, வாளி-அம்புகளை, கொள் - கொண்ட, இ  சிலையை - இந்த
வில்லை, அம்  புவிமேல் - அழகிய பூமியில், என் எதிர் - என எதிரிலே, குறை
கூறினர் - குறைவாக வார்த்தை