பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்153

சொன்னவர்கள், யார் ஆயின்உம் - எவரேயானாலும் ஆவிசெகுத்திடும் -
அவருயிரை (இவ்வில்) அழித்துவிடும்; இது-, வஞ்சினம் - (எனது) சபதமாம்;
ஆதலின்்-, இப்பொழுதே-, தார் ஆர் புயம் -  மாலைபொருந்திய தோள்களையும்,
வென்றி - வெற்றியையுமுடைய, யதிட்டிரனை - தருமனை, தலைகொள்வன் -
தலைதுணிப்பேன்,' என-  என்றுசொல்லி, தனுஉம் குனியா - வில்லையும் வளைத்து,
வாராமுன்-வருவதற்குமுன்னமே (மிகவிரைவிலே), மதுசூதனன் - கண்ணன்
அருச்சுனனை-, விலக்கி - தடுத்து, வருக என்று - வருவாயாக வென்றுசொல்லி
(அருகேயழைத்து), தழீஇ - தழுவிக்கொண்டு,- (எ- று.)- "என்னாவுரைசெய்தலும்"
என்று 208 ஆங் கவியில் வருவதனோடு தொடரும்.                 (297)

207.- பெரியோரைப் புன்மாழிகூறுதல் தலையறுத்ததனோடு
ஒக்குமென்று கண்ணன் கூறுதல்.

குரவோர்களைநீயெனினுங்கொலையிற் கொடிதென்றுயர்கேள்வி
                                      யர்கூறுவராக,
லுரவோனையுமம்முறைகொன்றதனோ டொக்குஞ்சில
                               புன்சொலுரைத்திடுவா,
யிரவோர்தமதின்முகம்வண்மையினாலிதயத்தொடுகண்டுமகிழ்ந்து
                                           பெரும்,
பரவோதநெடுங்கடல்சூழ்புவியிற்பரிதாபமொழித்தபனிக்
                                       குடையோய்.

     (இ-ள்.) இரவோர்தமது - இரக்கின்ற யாசகர்களது, இன்முகம் - இனிய
முகத்தை, வண்மையினால் - ஈகைக்குணத்தால், இதயத்தொடு - நல்மனத்தோடு,
கண்டு - பார்த்து மகிழ்ந்து - களித்து, பெரு - பெரிய, பாவு - பரவிய, ஓதம் -
அலைகளையுடைய, நெடு நீண்ட,  கடல் - கடலினால், சூழ்-சூழப்பட்டுள்ள,
புவியில்- பூமியில் (உள்ளவர்களது), பரிதாபம் - வருத்தமாகிய வெப்பத்தை, 
ஒழித்த -போக்கின, பனி குடையோய் - (நல்ல ஆளுகையாகிய)
குளிர்ந்தகுடையையுடையவனே!  'குரவோர்களை - ஐம்பெருங்குரவர்களை, நீ
எனின்உம் - (மரியாதைபற்றிப் பன்மையாகக் கூறாமல்) நீ என்று (இகழ்ச்சியாக
ஒருமையாற்) கூறினாலும், (அது), கொலையின் - (அவர்களைக்)
கொல்லுதலைக்காட்டிலும், கொடிது - கொடுமையையுடையது,' என்று-, உயர்
கேள்வியர்-சிறந்த நூற்கேள்விகளையுடைய பெரியோர்கள், கூறுவர் -
சொல்லுவார்கள்:  ஆல் - ஆதலால், அ முறை - அந்தக்கிரமப்படி,
உரவோனைஉம் - வலிமையையுடைய யுதிட்டிரனையும், கொன்றதனோடு ஓக்கும் -
கொன்றதோடு ஒப்பாகிற, சில புன்சொல் - சில இழிவான சொற்களை,
உரைத்திடுவாய் - சொல்லிவிடுவாயாக; (எ - று.)

     'பெரியோர்களைக் குறித்துச் சிறிது இகழ்ந்து, பேசினாலும் அவர்களைக்
கொலைசெய்ததோ டொப்பா மென்று சான்றோர்சொல்வார், ஆதலால், இப்பொழுது
நீ தருமனை நோக்கிச் சில இழிசொற்கள் சொல்வாயாக; சொன்னால்  அவனைக்
கொன்றதனோ டொப்பாம்.


     *The plural of this pronoun 'நீ' is not contained in the Behuistan
Tablets - the singular having been used instead of the plural in
addressing inferiors-  என்று கால்டுவெல் கூறியது, முதலடியில் நினைக்கத்தக்கது.