பக்கம் எண் :

156பாரதம்கன்ன பருவம்

211.-போர்க்களத்தில் பலவகையோசை யுண்டாதல்.

வெங்கோதைநெடுஞ்சிலையின்சிறுநாண்விசையோரதையும்
                        வெவ்விருதோதையும்வெண்,
சங்கோதையும்வண்பணையோதையுநால்வகையாகியதானை
                                  நெடுங்கடலின்,
பொங்கோதையுமண்டமுடைந்திடவப்புறமுற்றகலாதுசெவிப்
                                        படமற்
றிங்கோதையெழுந்ததறிந்திலராலிமையாவிழியோர்முதல்
                                     யாவருமே.

     (இ-ள்.) வெம் - கொடிய - வெற்றிமாலையையுடைய, நெடு சிலையின் -
நீண்டவில்லின், சிறு நாண் - சிறிய நாணியினது, விசை ஓதைஉம் -
வேகத்தாலுண்டாகியஒலியும், வெம் விருது ஓதைஉம் - கொடிய வெற்றிற்கு
அடையாளமானசின்னங்களின் ஒலியும், வெண் சங்கு ஓதைஉம் - வெண்மையான
சங்கத்தின்ஒலியும், வண் பணை ஓதைஉம் - பெரிய பறைகளின் ஒலியும், நால்
வகை ஆகியதானை நெடு கடலின்-பெரியகடல்போன்ற சதுரங்கசேனையின்,
பொங்கு  ஓதைஉம்- மிகுந்த ஒலியும், அண்டம் உடைந்திட - அண்ட கோளம்
(அதிர்ச்சியால்)உடைந்துவிடும்படி அப்புறம் உற்று-அப்பாலுள்ள பகிரண்டங்களிலுஞ்
சென்று,அகலாது - நீங்காமல், செவி பட - காதுகளிற் கேட்கப்பட, இமையா
விழியோர்முதல் யாவர்உம் - இமையாத கண்களையுடைய தேவர் முதலில்
எல்லோரும், இங்குஓதை எழுந்தது - இப்போர்க்களத்தில் உண்டான ஒலியென்று.
அறிந்திலர் -தெரிந்தாரில்லை; (எ-று.)-வேறு என்ன பேரொலியோவென்று சங்கித்து
அஞ்சினர்என்றபடி விருதோதை - விருதுகூறுகிற ஓசையுமாம், மற்று -
அசை.                                                        (302)

212.- மாயாசரகூடத்தையத்துக் கர்ணன் வீமனோடு
பொருவதுகண்டு அருச்சுனன் அங்குச் சேர்தல்

தாமங்களின் வைப்பருள்காளையுமச்சரகூடமறுத்தணி
                              தானையொடும்
வீமன்றனொடும்பொருகின்றமைதன்விழிகண்டுகளித்
                             திடவில்விசயன்
காமன்றனை நீறெழவென்றநுதற்கண்போலெரிகின்ற
                               கருத்துடனே
மாமந்தரவெற்பனதேர்கடவும் வலவன்றனொடாகவ
                               மன்னினனே.

     (இ - ள்.)  வில்விசயன் - காண்டீவத்தையுடைய அருச்சுனன்,- தாமங்களின்
வைப்பு - ஒளிகளுக்கு இருப்பிடமான சூரியன், அருள் - பெற்றருளிய,
காளைஉம் -கர்ணனும், அசர கூடம் அறுத்து - (கண்ணன்மாயையாலாகிய)
அந்தஅம்புக்கூட்டை அறுத்துத் தள்ளிவிட்டு, அணி தானையொடுஉம் - அழகிய
சேனையுடனும், வீமன் தனொடுஉம் - வீமசேனனுடனும், பொருகின்றமை - போர்
செய்கிறதை. தன் விழி - தனது கண்கள், கண்டு - பார்த்து, களித்திட - மகிழா
நிற்ககாமன்தனைநீறு எழ வென்ற - மன்மதனைச் சாம்பராம்படியெரித்து வெற்றி
கொண்ட, நுதல் கண்போல் - (பரமசிவனது) நெற்றிக்கண்போக, எரிகின்ற-
(கோபத்தால்) தபிக்கிற, கருத்துடனே- மனத்துடனே, மா மந்தர வெற்பு அன -
பெரிய மந்தரமலையைப் போன்ற, தேர் - தேரை, கடவும்-செலுத்துகிற,
வலவன்தனொடு-சாரதியாகிய கண்ணனோடு, ஆகவம்-போர்க்களத்தை, மன்னினன்-
அடைந்தான்;(எ - று.)