துகள் வெயிலைமறைத்தாலும், மணிவெயில் அவனியி லெழுந்த தென்க: உயர்வுநவிற்சியணி - வலமிட நிகழ்புரிவு - வலசாரியும், இடசாரியும். அசுவிநீதேவர் - தேவவைத்தியர்; இவர் - பெண்குதிரை வடிவங்கொண்டு வனத்தில் ஒளித்திருந்த சமிஜ்ஞையென்னும் மனைவியினிடத்துக் குதிரை வடிவமாய்ச்சேர்ந்த சூரியனுக்குப் பிறந்த பிள்ளைகள். (26) 27.- அவர்கள் குதிரைகளின் வருணனை. அசைவிறொடையடிகசைகுசையுரநினை வறியுமுணர்வினவளமை யுமுடையன, வசையில்சுழியனபழுதறுவடிவின வருணமொழிகுரன் மனவலிமிகுவன, விசைகொள்பலகதியினும்விரைவுறுவன விபுதர்குல பதிவிடுபரிநிகர்வன, விசைகளொருபதுதிசைகளுமெழுதிய விறைவரிருவருமிசை கொளுமிவுளியே. |
(இ -ள்.) இசைகள் -(தமது) கீர்த்திகளை, ஒருபது திசைகள் உம் - பத்துத் திக்குக்களிலும், எழுதிய - எழுதிநாட்டிய, இறைவர் இருவர்உம்- அரசர்கள் இருவரும்[கர்ணனும் நகுலனும்], மிசைகொளும் - ஏறியுள்ள, இவுளி - குதிரைகள்,- அசைவு இல் -சோர்தல் இல்லாத, தொடை அடி-(தம்மேல் ஏறியவரது) தொடைகளின் அடிகளாலும், கசை - சவுக்கின் அடிகளாலும், குசை உரம் - கடிவாளத்தையிழுக்கும் வலிமையாலும், நினைவு - அவர்களெண்ணத்தை, அறியும் -தெரிந்து கொள்ளுகின்ற, உணர்வினை - நல்லறிவையுடையவை; வளமைஉம்உடையன - வளர்ச்சியையும் உடையவை; வசை இல் சுழியன - குற்ற மில்லாதசுழிகளை யுடையவை; பழுது அறு வடிவின - குற்றமில்லாத வடிவத்தை யுடையவை; வருணம் - நிறமும், மொழி குரல் - கனைக்கின்ற ஒலியும், மனம் வலி -மனத்தின் ஊக்கமும், மிகுவன - சிறந்துள்ளவை: விசை கொள் - வலிமைகொண்ட,பல கதியின்உம் - பலவகை நடைகளிலும், விரைவு உறுவன - வேகம்பொருந்துபவை; விபுதர் குலபதி - தேவர்கூட்டத்துக்குத் தலைவனான இந்திரன், விடு - செலுத்துகின்ற, பரி -(உச்சைச்சிரவ மென்னும் வெள்ளைக்) குதிரையை, நிகர்வன - ஒத்திருப்பவை; (எ-று.) குற்றமுள்ள சுழிகள் - சந்திரம், அண்டாவர்த்தம், கௌவகம், காகாவர்த்தம், முன்வளையம், கேதாரி, கேசாவர்த்தம், பட்டடை என்பன. குற்றமற்றசுழி - கழுத்தில்வலமாகச் சுழிந்திருக்குந் தேவமணி முதலியன. (27) 28.- கர்ணநகுலரது போர். முடியுமொருகவிகையுமிருகவரியுமுதிருமெரிவிடமுரணர வெழுதிய, கொடியமுடையவனெலுவலுமுரசுயர்கொடியிலெழுதிய குருபதியிளவலு, நெடியவரிசிலைநிலைபெறவளையவு நிமிரவிடுகணை நிரைநிரை முடுகவு, மிடியுலெழுமடியதிர்குரல்விளையவு மிவுளியமர்கடிதிகலொடு புரியவே. |
இதுமுதல் ஐந்து கவிகள் - குளகம். (இ-ள்.) முடிஉம் - கிரீடத்தையும், ஒரு கவிகைஉம் - ஒற்றை (வெண்கொற்ற)க் குடையையும், இரு கவரிஉம் - இரண்டு சாமரங் |