பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்163

                              மேதுணிந்திடும்வகை,
யழலெழுநெஞ்சொடுபடிநின்றுதையினனளிமுரல்பங்கய
                                  நாயகன்குமரனே.

     (இ -ள்.) அளி முரல் - வண்டுகள் ஒலிக்கின்ற. பங்கயம் - தாமரைக்கு,
நாயகன் - தலைவனான சூரியனது, குமரன் - குமாரனான கர்ணன்,- மழு உறு -
பரசு என்னும் ஆயுதம் பொருந்திய, செம் கை - சிவந்த கையையுடைய, இராமன்
என்பவன் - பார்க்கவராமனென்பவர், அருள் - கொடுத்தருளிய, வரி சிலை -
கட்டமைந்தவில்லை, கொண்டு - (கையிற்) பிடித்து, அணி நாணி - அழகிய நாண்,
தன் செவியோடு - தனது காதுகளோடு, தழுவுற - பொருந்தவும்,- மண்டலம்
ஆய் -வட்டவடிவமாய், வளைந்திட - (வில்) வளையவும், தறுகண் -
அஞ்சாமையையுடைய,முது நெடு சினம் மூளும் - பழைய பெருங்கோபம் மிகுந்த,
வெம் கணையினை -கொடிய நாகாஸ்திரத்தை, எழிலிமதங்கயம் வாகனன் -
மேகமாகியானையைவாகனமாகவுடைய இந்திரனுக்கு, தனயனது - குமாரனான
அருச்சுனனுடைய, எழில்பெறு - அழகைப் பெற்ற, கந்தரம்ஏ - கழுத்தே,
துணிந்திடும்வகை - அறுபடும்படி,அழல் எழும் நெஞ்சோடு - வெப்பம்பொருந்திய
மனத்துடனே, நாடி நின்று -இலக்குப் பார்த்து நின்று, உதையினன் -
பிரயோகித்தான்; (எ-று.)

     மழுவுறு கை யிராமன் - பரசுராமன்; இவர், ஸ்ரீமகாவிஷ்ணுவினது ஆறாம்
அவதாரம்: இவரிடத்துக் கர்ணன் பிராமணவடிவமாச்சென்று தநுர்வேதம் பயின்றான்,
முது சினம் - தன்தாயை அருச்சுனன் கொன்றதனாலாகியது. கந்தரமே, ஏகாரம் -
பிரிநிலையோடு தோற்றம், சூரியனைக் கண்டமாத்திரத்தில் தாமரைமலர்தலால்,
தாமரையாகிற பெண்ணுக்குச் சூரியனைக் கணவனென்பது, மரபு.         (314)

224.- அந்தநாகக்கணை அருச்சுனனுடைய கிரீடத்தைத்
தாக்கித் தள்ளுதல்.

வலவனெனுந்திருமாலதன்றுனைகெழு வரவையறிந்தணிதேரின்
                                      வன்றிகிரிக,
ளிலகியவங்குலியாறிரண்டவனியி னிடைபுதையும்படி
                                  தாழநின்றிடுதலி,
னலர்கதிதந்தருள்காளையம்பெனவிடு மரவுதனஞ்
                        ஏயன்மார்பையுங்களனையும்,
விலகியவன்றனதாதையன்றுதவியவெயின்மகுடந்தனைமோதி
                                      வந்திடறவே.

இதுவும் மேலைக்கவியும் - ஒருதொடர்

     (இ -ள்.) வலவன் ஏனும் - அருச்சுனசாரதி யெனப்படுகிற, திருமால் -
கண்ணன், அதன் - அந்நாகாஸ்திரத்தின், துனை கெழு - உக்கிரம் [வேகம்]
மிகுந்த,வரவை - வருகையை, அறிந்து - தெரிந்து, அணி தேரின் - அழகிய
(தமது)தேரினது, வல் திகிரிகள் - வலிய சக்கரங்கள், இலகிய - விளங்கிய,
அங்குலி ஆறுஇரண்டு - பன்னிரண்டு அங்குலம், அவனியினிடை - பூமியில்,
புதையும்படி -அழுந்தும்படி, தாழ நின்றிடுதலின் - அழுத்தி நின்றதனால், அலர்
பதிர் தந்தருள்காளை - விளங்குகிற கிரணங்களையுடைய சூரியன் பெற்றருளிய
பிள்ளையானகர்ணன், அம்பு என விடும் - அஸ்திர