பக்கம் எண் :

பதினாறாம் போர்ச்சருக்கம்17

களையும், முதிரும் எரி விடம் அரவு எழுதிய கொடிஉம் - மிக்க வெதும்புகின்ற
விஷத்தையுடைய கோபிக்கிற பாம்பின் வடிவத்தை யெழுதியுள்ள துவசத்தையும்,
உடையவன் - உடையவனான துரியோதனனுடைய, எலுவல்உம் - தோழனாகிய
கர்ணனும்,- முரசு - முரசத்தின் வடிவத்தை, உயர் கொடியில் - உயர்ந்த துவசத்தில்,
எழுதிய-, குரு பதி - குருகுலத்துக்குத் தலைவனான தருமபுத்திரனது, இளவல்உம் -
தம்பியாகிய நகுலனும்,- நெடிய வரி சிலை - நீண்ட கட்டமைந்த (தமது) வில்,
நிலைபெற வளையஉம் - நிலையாக வளைந்திருக்கவும்,- நிமிர விடு கணை -
வேகமாய்எய்யப்படுகின்ற (தமது) அம்புகள், நிரை நிரை முடுகஉம் - வரிசை
வரிசையாகவிரைந்து செல்லவும்,- இடியில் - இடியோசையைக்காட்டிலும்,
எழுமடி - ஏழுமடங்குஅதிகமாக, அதிர்குரல் - ஆரவாரிக்கின்ற ஓசை,
விளையஉம் - உண்டாகவும்,-இவுளி அமர் - குதிரைமேலிருந்து செய்யும் போரை,
கடிது இகலொடு - மிக்கவலிமையுடனே, புரிய - செய்ய,- (எ -று.)

     எலுவல் - கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டனுட் சீதநாட்டுத் திசைச்சொல்;
பெண்பால் - இகுளை. முடியும் இருகவிகையும் இரு கவரியும் கொடியும் -
அரசர்க்கு உரிய அங்கங்கள்.                                      (28)

29.- கர்ணனது குதிரைமுதலியன அழிதல்.

நகுலன்விடுகணைவிதரணகுணபதி நடவுகுரகதநடை
                              பயில்குரமற,
விகலும்வரிசிலைநடுவறவடமற விடுகவசமறவெழுதருமிருபுய,
சிகரிபுதையவுமுரமுழுகவுநுத றிலகமெனவொளிதிகழவு
                                    மலைதலின்,
மகிழ்வுசினமெனுமிருகுணமுடன்மனமறுகநிலனிடைவலனுற
                                      விழியவே.

     (இ-ள்.) நகுலன்-, -விடு கணை - (தான்) எய்கின்ற அம்புகளினால், விதரண
குண பதி நடவு - தானகுணத்துக்குத் தலைவனான கர்ணன் ஏறிச்செலுத்துகின்ற,
குரகதம் - குதிரையின், நடை பயில் குரம் - கதிகளைப் பயின்ற குளம்புகள்
[கால்கள்], அற - அறுபடவும் - இகலும் - போர்செய்கின்ற, வரி - கட்டமைந்த,
சிலை - (அக்கர்னனது) வில், நடு அற - நடுவில் அற்றுப்போகவும்,-எழுதரும்
இருபுயசிகரி - ஒங்கிவளர்ந்த மலை போன்ற இரண்டு தோள்களில் , புதைய
உம் -அழுந்தவும்,- உரம் - மார்பில், முழுகஉம் - உட்புகவும்,- நுதல் -
நெற்றியில், திலகம்என - சிந்தூரத் திலகம்போல, ஒளி திகழஉம்- (இரத்தத்தால்)
சிவந்த ஒளிவிளங்கவும்,- மலைதலின் - போர் செய்ததனால்,- (கர்ணன்),- மகிழ்வு
சினம் எனும்இரு குணமுடன் - களிப்பும் கோபமும் என்கிற இரண்டு
குணத்தோடும், மனம் மறுக- மனஞ்சுழல, நிலனிடை - பூமியில், வலன் உற -
வலிமை பொருந்த, இழிய -இறங்க, (எ -று.)

     எழு தரும் - இருப்புத்தூணை யொத்த, தோளுமாம், மகிழ்வி -
சிறந்தவீரனோடு தனக்குப்போர்நேர்ந்ததனாலும், தன் தம்பியாகிய அவனது
போர்த்திறத்தைப் கண்டதனாலு மென்க.                             (29)