வதற்குக் கிடைக்காத, பெரு பயன் - பெரிய (மோட்சமாகிய) பிரயோஜனத்தை, நின்திரு அருளால் - உனது மேன்மையான கருணையினால், பெற பெற்றேன்- (இனி)அடையப்பெற்றேன்; (எ - று.) கங்கைக்குத் தெய்வத்தன்மை - தன்னில் ஒருகால் மூழ்கியவருக்குங் கருமமனைத்தையும் போக்கி நற்கதியளித்தல். அனிலயோக மென்னும் பாடத்துக்கு- வேறொன்றையுமுண்ணாமற் காற்றையே யுண்டு செய்யும் யோகமென்க. இதுமுதற் பன்னிரண்டு கவிகள் - இச்சருக்கத்தின் பதினேழாங்கவிபோன்ற எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தங்கள். (337) 247. | நீலநெடுங்கிரியுமழைகிலும்பவ்வநெடுநீருங்காயாவு நிகர்க்குமீந்தக், கோலமும்வெங்கதைவாளஞ்சங்குநேமி கோதண்ட மெனும்படையுங்குழைத்தவாச, மாலைநறுந்துழாய்மார்புந்திரண்டமலர்ந்தமுகமுஞ்சோதிக் கதிர்முடியுமிம்மையிலேகண்ணுற்றேனே. |
(இ-ள்.) நீலம் - நீலரத்தினமயமாகிய, நெடு கிரிஉம் - பெரிய மலையையும், மழை முகில்உம் - மழைபொழிகிற காளமேகத்தையும், பவ்வம் நெடு நீர்உம் - கடலின் மிகுந்த நீரையும், காயாஉம் -காயாமலரையும், நிகர்க்கும் - ஒக்கின்ற,-இந்த-, கோலம்உம் - (உனது) திருமேனியையும், வெம் - (பகைவர்க்குக்) கொடிய, கதை - கதையும், வாளம் - வாளும், சங்கு - சங்கமும், நேமி - சக்கரமும், கோதண்டம் - வில்லும், எனும் - என்கிற, படைஉம் - பஞ்சாயுதங்களையும், குழைத்த - தளிர்த்த, வாசம்-வாசனையையுடைய, நறு - நல்ல, துழாய் மாலை - திருத்துழாய்மாலையையணிந்த, மார்புஉம் - திருமார்பையும், திரண்ட தோள்உம் - திரட்சியாகவுள்ள தோள்களையும், மணிகழுத்துஉம் - அழகிய திருக்கழுத்தையும், செம் இதழ்உம் - சிவந்த திருவதரத்தையும், காலம் - (தக்க) பருவத்தில் மலர்ந்த, வாரிசாதம் மலர் என - தாமரைப்பூப்போல, மலர்ந்த - மலர்ந்துள்ள, முகம்உம் - திருமுகத்தையும், சோதி கதிர் முடிஉம் - மிகுந்த ஒளியையுடைய - திருமுடியையும், இம்மையில்ஏ - இப்பிறப்பில்தானே, கண்ணுற்றேன் - (பிரதியக்ஷமாகத்) தரிசிக்கப்பெற்றேன்; (எ - று.)-வாரி ஜாதம் - நீரிற் பிறப்பது. சோதிகதிர் - ஒருபொருட்பன்மொழி. பி-ம்: குழையுங் காதும் காலை. (338) 248. | தருமன்மகன்முதலானவரியகாதற்றம்பியரோடமர்மலைந்து தறுகணான்மைச், செருவிலெனதுயிரனையதோழற்காகச் செஞ்சோற் றுக்கடன்கழித்தேன்றேவர்கோவுக், குரைபெறுநற்கவசமுங்குண்டலமுமீந்தேனுற்றபெருநல் வினைப்பேறுனக்கேதந்தேன், மருதிடைமுன்றவழ்ந்தருளுஞ்செங்கண்மாலேமாதவத் தாலொருதமியன்வாழ்ந்தவாறே. |
(இ-ள்.) முன் - முன்னே (கிருஷ்ணாவதாரத்தில் இளம்பிராயத்தில்), மருது இடை - இரட்டை மருதமரங்களினிடையே, தவழ்ந்தருளும் - தவழ்ந்துசென்றருளிய, செம் கண் மாலே - சிவந்த திருக்கண்களையுடைய திருமாலென்னுந் திருநாமமுடையவனே! |