தறுகண் - அஞ்சாமையோடுகூடிய, ஆண்மை - பராக்கிரமத்துக்கு இடமான, செருவில் - போர்க்களத்தில், எனது உயிர் அனையதோழற்கு ஆக - என்னுடைய உயிரையொத்த நண்பனாகிய துரியோதனன் பொருட்டாக, தருமன் மகன் முதல் ஆன - தருமபுத்திரன் முதலய, அரிய - (பெறுதற்கு) அருமையான, காதல் - அன்பையுடைய, தம்பியரோடு - தம்பிமார்களுடனே, அமர் மலைந்து - போர் செய்து, செம் சோறு கடன் கழித்தேன்-(அவன் எனக்குச்) செவ்வையாகப் போகட்டுவந்த சோற்றுக்குப் பிரதியுபகாரஞ்செய்துவிட்டேன்; தேவர் கோவுக்கு - தேவேந்திரனுக்கு, உரைபெறு - உயர்ச்சி பெற்ற, நல் கவசம்உம் - நல்ல கவசத்தையும், குண்டலம்உம் - குண்டலங்களையும், ஈந்தேன் - தானஞ்செய்தேன்; உற்ற பெருநல்வினை பேறு - பொருந்திய பெரிய புண்ணியமாகிய பயனை, உனக்கே-, தந்தேன் - கொடுத்தேன், ஒருதமியன் - (உன்னையன்றி) வேறு துணையுங் கதியுமில்லாத ஒப்பற்ற யானொருத்தன், மா தவத்தால்- (முற்பிறப்பிற் செய்த) சிறந்த தவத்தின் பயனால், வாழ்ந்த ஆறு ஏ - இப்படிப்பட்ட பெருவாழ்வையடைந்த விதம் வியக்கத்தக்கதே; (எ - று.) (339) 249. | வான்பெற்றநதிகமழ்தாள்வணங்கப்பெற்றேன் மதிபெற்ற திருவுளத்தான்மதிக்கப்பெற்றேன், றேன்பெற்றதுழாயலங்கற்களபமார்புந் திருப்புயமுந்தைவந்துதீண்டப்பெற்றே, னூன்பெற்றபகழியினாலழிந்துவீழ்ந்துமுணர்வுடனின்றிரு நாமமுரைக்கப்பெற்றேன், யான்பெற்றபெருந்தவப்பேறென்னையன்றியிருநிலத்திற் பிறந்தோரில்யார்பெற்றாரே. |
(இ-ள்.) வான் பெற்ற - ஆகாயத்திற் பொருந்திய, நதி-தேவகங்காநதி, கமழ் -தோன்றின, தாள் - (உனது) திருவடிகளை, வணங்கப்பெற்றேன் - சமஸ்கரிக்கப்பெற்றேன்; மதி பெற்ற - சந்திரனை யுண்டாக்கின, திரு உளத்தால் - மேன்மையான (உனது) மனத்தினால், மதிக்கப்பெற்றேன் - கௌரவிக்கப்பெற்றேன்; தேன் பெற்ற - தேனையுடைத்தான், துழாய் - திருத்துழாயினாலாகிய, அலங்கல் - மாலையையும், களபம்-கலவைச் சந்தனத்தையும் அணிந்த, மார்புஉம் - (உனது) திருமார்பும், திருபுயம்உம் - திருத்தோள்களும், தைவந்து தீண்டப்பெற்றேன் - (என்மேல)் தடவி ஸ்பரிசிக்கப்பெற்றேன்; ஊன் பெற்ற - (பகைவர் உடம்பின்) தசையை (நுனியிலே பொருந்த)ப் பெற்ற, - பகழியினால் - (அருச்சுனன்) பாணத்தினால், அழிந்து - வலிகெட்டு, வீழ்ந்துஉம் - கீழேவிழுந்த பின்பும், உணர்வுடன் - நல்லறிவோடு, நின் திரு நாமம் - உனது சிறந்த பெயர்களை, உரைக்கப்பெற்றேன் - சொல்லப்பெற்றேன்; யான் பெற்ற - நான் அடைந்த, பெரு தவம் பேறு - பெரிய தவத்தினாற் பெறுதற்குரிய பாக்கியத்தை, என்னை அன்றி - என்னையல்லாமல், இரு நிலத்தில்பிறந்தோரில் - பெரிய நிலவுலகத்திற் பிறந்தவர்களுள், யார் - வேறுயார், பெற்றார்-? (எ - று.) திருமால் உலகமளந்தகாலத்தில் மேலே சத்தியலோகத்திலே சென்ற அவரது திருவடியைப் பிரமன் தன்கைக் கமண்டல தீர்த்தத்தாற் கழுவிவிளக்க அந்த ஸ்ரீபாததீர்த்தமே கங்காநதி |