(இ-ள்.) இ வகைஏ - இவ்விதமாக, திரு தமையன் - சிறந்த அண்ணனான கர்ணனது,இணை அடிக்கீழ் - உபயபாதங்களின்கீழ், வீழ்ந்து-, அலறி - வாய்விட்டுக்கதறி,யாய்உம் - தாயும் தாங்கள் ஐவர்உம் - (பாண்டவராகிய) தாங்கள்ஐந்துபேரும்,ஆகுலத்தால் - துயரினால், அழிந்த - வருந்திய, நெஞ்சார் -நெஞ்சையுடையவர்களாய், போய்-, தம் பாடி வீடு - தமதுபடைவீட்டை, அடைந்தார்-, தைவருதிண் சிலை - தீண்டியெய்தற்கு உரிய வலிய வில்லை யேந்திய,தட கை - பெரியகையையுடைய, சகுனி தனை - சகுனியை, முதல் ஆன- முதலாகவுடைய, தரணிபாலர் - அரசர், பைவரு - படமெடுத்தலையுடைய, மாசுணம் - பாம்பின்வடிவத்தை, துவசம்-கொடியிலேகொண்டுள்ள, பார்த்திவனை - துரியோதனராசனை, கொண்டு - தம்முடனழைத்துக் கொண்டு, தம்பாடி - தமது பாசறையை, புக்கார் - போய்ச்சேர்ந்தார்கள்; (எ - று.) (360) பதினேழாம்போர்ச்சருக்கம் முற்றிற்று. -------- கன்னபருவம் முற்றுப்பெற்றது. ---------- |