துய்மன்உம் - த்ருஷ்டத்யும்நனும், கொற்றவர் ஐவர்உம் - வெற்றியையுடைய பஞ்சபாண்டவர்களும், மற்று உள பூபர்உம் - மற்றுமுள்ள அரசர்களும், வைனதேயன் கொடியோன்உம் - கருடத்துவசத்தையுடையவனான கிருஷ்ணனும்,- உற்று எழு - திரண்டு புறப்படுகின்ற, கச ரத துரக பதாதிகள் ஆன - யானைகளும் தேர்களும் குதிரைகளும் காலாள்களுமாகிய (நான்கு அங்கங்களையுடைய), சேனையுடனே - சேனையோடு, சென்று - (போர்களத்துக்குப்) போய்,- 'இற்றை அருஞ் சமம் - இன்றைத்தினத்து அரிய யுத்தத்தில், வெல்லுதல் - (பகைவரைச்) சயித்தல், எம் கடன் - எமது கடமை', என்று - என்று எண்ணிக்கொண்டு, துன்றி - நெருங்கி, எதிர்கொண்டார் - (பகைவர் சேனையை) எதிர்த்தார்கள்; (எ -று.) 'சொற்றவறாத துரோணன்' என்றது - சபதஞ்செய்தபடி அருச்சுனனைக்கொண்டு துருபதனை வென்று கட்டிக்கொணரச் செய்ததனாலும், முதல்நாள்போரிற் க்ருஷ்ணன் முன்னிலையிற் சொன்னபடி அசுவத்தாமன் இறந்தமைகேட்டுச் செயலொழிந்து திருஷ்டத்யும்நனாற் கொல்லப்பட இறந்ததனாலும்.இனி - அருள் கொண்டு கூறினாலும் வெகுண்டு கூறினாலும் அந்தந்தப்பயன்களைத் தந்தே விடுகின்ற நிறைமொழிகளை யுடைமையாலென்றுமாம். (3) 4.- கர்ணன் தன்சேனையை மகரவியூகமாக வகுத்தல். கற்கியும்வண்டினமொய்க்கமதம்பொழிகரியுந்தேருங்காலாளும் பொற்கொடியுங்குடைவர்க்கமுமாலையுமுன்னுளரென்னும்பூபாலர் நிற்குநிலந்தொறுநிற்குநிலந்தொறுநின்றுநின்றுவினைசெய்ய மற்கெழுதிண்புயவர்க்கன்மகன்பெருமகரயூகம்வகுத்தானே. |
(இ-ள்.) மல் கெழு - மற்போரில் வல்ல, திண் புயம் - வலிய தோள்களையுடைய, அர்க்கன் மகன் - சூரியகுமாரனாகிய கர்ணன்,- கற்கிஉம் குதிரைகளும், வண்டு இனம் மொய்க்க மதம் பொழி கரிஉம் - வண்டுக்கூட்டம் மொய்க்கும்படி மதநீரைச் சொரிகின்ற யானைகளும், தேர்உம் - இரதங்களும், காலாள்உம் - பதாதிகளும், பொன் கொடிஉம் - பொற்காம்பையுடைய துவசங்களும்,குடை வர்க்கம்உம் - குடைவரிசைகளும், மாலைஉம் - (போர்க்குஉரிய)மாலைகளும், முன் - முதலியவற்றை, உளர் - உடையவர், என்னும் - என்றுசொல்லப் படுகின்ற, பூபாலர் - அரசர்கள், நிற்கும் நிலம்தொறுஉம் நிற்கும்நிலம்தொறுஉம் - (தாம்தாம்) நிற்பதற்குஉரிய இடங்கள்தோறும், நின்றுநின்று-, வினைசெய்ய - போர்தொழிலைச் செய்யும்படி, பெரு மகரயூகம் வகுத்தான் - பெரியமகரவியூகமாக (ச் சேனையை) அணிவகுத்தான்; (எ -று.) பொன் - அதனாலாகிய காம்புக்குக் கருவியாகுபெயர். மகரத்தின் வாயிடத்திலே கர்ணனும், கண்களிலே சகுனியும் உலூகனும், சிரசிலே அசுவத்தாமனும், கழுத்திலே துரியோதனன் தம்பிமாரனைவரும், இடையிலே பெருஞ்சேனைசூழ்ந்த துரியோதனனும், முன் இடக்காலிலே நாராணகோபாலரோடு கூடிய கிருதவர்மாவும், வலக்காலிலே திரிகர்த்தரோடுந் தென்னாட்டாரோடுங் கூடியகிருபனும், |