'அரும்பி' என்ற சொல்லின் ஆற்றலால், கைகள் தாமரை மலர்போன்றன வென்பது தொனிக்கும். (60) 61. | கடகரியேனமொடொத்தனவம்பொடுபோனகரத்தனவே புடவியின்மீதுறைநிறைமதியம்பலபோனகரத்தனவே படுதிறல்வேலவர்கண்மணிசென்றுபறித்தனவாயசமே யடுபணையானையின்வெங்குடர்சென்றுபிடுங்கினவாயசமே. |
(இ-ள்.) புடவியின்மீது - பூமியில், உறை - வந்துதங்கிய, நிறை மதியம் பல போல் - (பதினாறுகலைகளும்) நிரம்பிய பல பூர்ணசந்திரர் போன்ற, நகரத்தன - நகங்களையுடையனவாகிய, கட கரி - மதயானைகள், அம்பொடு - (பகைவர் எய்த) அம்பினால், போன கரத்தன- அற்றுவிழுந்த துதிக்கையை யுடையனவாகி, ஏனமொடுஒத்தன - பன்றிகளொடு ஒத்திருந்தன; வாயசம் - காக்கைகள், கடு - இறந்த போன,திறல் வேலவர் - வலிய வேலாயுதத்தையுடைய வீரர்களது, கண் மணி - கண்களின்கருவிழிகளை, சென்று பறித்தன - போய்க் குத்தியெடுத்தன; ஆயசம் - ஆயுதங்கள்,அடு - (பகைவரைக்) கொல்லுகிற, பணை - பருத்த, யானையின்-, வெம் குடர் -கொடிய குடலை, சென்று பிடுங்கின-; (எ-று.)- ஆயஸம் - இரும்பினாலாகியது எனப்பொருள்படுங் காரணக்குறி; வடமொழித்தத்தி தாந்தநாமம். நகரம் - உகிர்: வடசொல் (61) 62. | அணிதொடைதேன்மதுகரகநிரைசாலவருந்தவிளைத்தனவே மணிமுடிபாரமுறப்பலநாகம்வருந்தவிளைத்தனவே கணைபலவீரர்முகத்தனதோளனகண்ணனமார்வனவே நிணமொடுமுளைநெடுங்குடர்பூதநிரைக்கணமார்வனவே. |
(இ-ள்.) அணி -(வீரர்கள்) அணிந்துள்ள, தொடை - மாலைகள் மதுகரம் நிரை அருந்த - வண்டுகளின் கூட்டம் குடிக்கும்படி, தேன் - தேனை, சால - மிகுதியாக, விளைத்தன - உண்டாக்கின; பல நாகம்- (கீழிருந்துபூமியைத் தாங்குகிற) சர்ப்பங்களெல்லாம், மணி முடி - மாணிக்கத்தையுடைய (தம்) தலைகளின்மேல், பாரம் உற - சுமை அதிகப்படுதலால், வருந்த இளைத்தன - வருத்தமுண்டாக மெலிந்தன; பல கணை - பல அம்புகள், வீரர் - வீரர்களது, முகத்தன - முகத்தில் தைத்தனவும், தோளன - தோள்களில் அழுந்தினவும், கண்ணன் - கண்களிடத்தனவும், மார்வன - மார்பிற்பாய்ந்தனவுமாயின; பூதம் கணம் நிரை - பூதகணங்களின் கூட்டம் , நிணமொடு - கொழுப்பையும், மூளை - மூளையையும், நெடுங் குடர் - நீண்ட குடல்களையும், ஆர்வன - உண்பன; (எ-று.)-ஒன்றன் கூட்டம்,பலவினீட்டம் என இரண்டுவகை உளவாதல் பற்றி, 'பூதநிரைக்கணம்' என்றார். (62) 63. | ஆவமொ டொத்தன வாடவர் நெஞ்சுக ளாகிய போதகமே பூவல யத்துட லாருயிர் வானிடை புக்கன போதகமே மேவுந ரிக்குவி ழைந்தன வெங்கரி வீழ்தலை யோதனமே நாவல ருக்குமு ரைப்பரி தந்தந னந்தலை யோதனமே. |
(இ-ள்.) ஆடவர் - வீரர்களுடைய, நெஞ்சுகள் ஆகிய போது அகம் - இருதயகமலங்களினிடங்கள், (பகைவரெய்த அம்புகள் மிகுதி |