திரனாகிய துரியோதனனது, உரக துவசம்உம் - பாம்புக் கொடியும், அருமந்த தேர்உம்- (கிடைத்தற்கு) அரிய அமிருதம்போன்ற [மிகச் சிறந்த] தேரும், விசயம் வலவன்உம் - வெற்றியைத்தருகிற சாரதியும் அடல் கொண்டு பாய் புரவிஉம் - வலிமைகொண்டு பாய்கிற குதிரைகளும், (ஆகிய நான்கும்). அழிவுஉற - அழிவடையும்படி,- நாணி எறியும் ஒலி - வில்நாணி தெறிப்பதனாலுண்டாகிய ஓசை, உரும் அஞ்ச - இடியும் அச்சமுறுமாறு, எழ - உண்டாக. ஒளி விஞ்சு நாலு பகழி - ஒளிமிக்கநான்கு அம்புகளை, உதைய -செலுத்த,-(எ - று.)- நிலை - விற்போர்செய்வார்க்கு உரிய நிலை.அருமந்த =அருமருந்தன்ன; மரூஉ. (78) 79.- துரியோதனன் வீசிய வேற்படையைத் தருமன் துணித்தல். இழிதந்துமீளவிமயமனையதொ ரிரதங்கடாவியெதிரியுரனிடை, யழிதந்துமீளவயில்கொண்முனையதொரயில்கொண்டுவீசியெறியு மளவையின், மொழிதந்தவேலின்முனையுமொடிவுற முரிவுண்டுகீறிவழியில் விழவெதிர், பொழிதந்ததாலொர் மொழிதந்ததாலொர் பகழியறனருள் புதல்வன்கைவாகைபுனையும்வரிவிலே. |
(இ-ள்.) (துரியோதனன்), இழிதந்து - (தேரினின்று) இறங்கி, மீள - மறுபடியும்,இமயம் அனையது ஓர் இரதம் - இமயமலைபோன்றதொரு பெருந்தேரை, கடாவி -ஏறிநடத்திக்கொண்டு, எதிரி - பகைவன், உரன்இடை - மார்பினிடம், அழிதந்து -அழியப் பெற்று, மீள - திரும்பிப்போம்படி, அயில் கொள் முனையது ஓர் அயில் -கூர்மையைக் கொண்ட நுனியையுடையதாகிய ஒருவேலாயுதத்தை, கொண்டு -கையிலெடுத்து, வீசி எறியும் அளவையில் - வேகமாய் எறிகிற சமயத்தில்,- அறன்அருள் புதல்வன் - தருமக்கடவுள்பெற்ற புத்திரனது, கை - கையிலுள்ள, வாகைபுனையும் - வாகைப்பூமாலையைச் சூடிய, வரி வல் - கட்டமைந்த வில்லானது,-மொழி தந்த -(கீழ்ச்) சொல்லப் பட்ட, வேலின் - வேலினது, முனைஉம் - நுனியும்,ஒடிவுஉற - ஒடியவும், முரிவுஉண்டு - (அவ்வேலும்) பிளந்து, கீறி - (இரண்டு)துண்டாகி, வழியில் விழ - இடைவழியில் விழவும், ஓர் பகழி - ஓர் அம்பை, எதிர் -எதிரே, பொழிதந்தது - பிரயோகித்தது; (எ -று.)-பி -ம் அளவினின். (79) 80.- தருமன் துரியோதனனைத் தோற்கடித்தல். பிளவுண்டுவேல்விழுதலின்மகிபதி பிழைகொண்டவேழமனைய மெலிவின, னுளநொந்துநாணியுருளுமிரதமு முடைதந்துபோருமொழியும் வகைசில, கிளரம்புவீசியொருபவளமுது கிரிநின்றதாகுமெனமுனிலைபெறு, வளமைந்தன்வாய்மையுரைசெய்தனன்மிசை வருமும்பர் யாருமிதயமகிழவே. |
(இ-ள்.) வேல்-, பிளவுண்டு - பிளக்கப்பட்டு, விழுதலின் - கீழே விழுந்துபோனதால், பிழைகொண்ட வேழம் அனைய மெலிவினன்- (தன்குறிப்புத்) தவறுதலைக்கொண்ட யானையைப்போன்ற வாட்டத்தையுடையவனாகிய, மகிபதி - அத்துரியோதனராசன், (பின்னும்), உளம் நொந்து - மனம்வருந்தி, நாணி - வெள்கி, உருள் |