லின்றே, கொய்வருதார்ப் புயப்பகைவர் சிரங்க ளெல்லாங் குறையுடலங் கூத்தாடக்கொய்வே னென்றான். (இ-ள்.) ஐவர் - பாண்டவர்களது, பதாகினி வெள்ளம் - சேனைத்திரள், அணிந்த ஆ(று) - அணிவகுக்கப்பட்டுநின்ற விதத்தை, அடு விறல் கோல் - (பகைவர்களைக்) கொல்லுகின்ற வெற்றியையுடைய அம்புகளைச் சொரிகின்ற, நெடுவில் - நீண்ட வில்லேந்திய, கை - கையையுடைய, அங்கர் கோமான் - அங்கதேசத்தார்க்கு அரசனான கர்ணன், கண்டு - பார்த்து, பை வரும் - படம் பொருந்திய, மாசுணம் கொடியோன் தன்னை நோக்கி - பாம்புக்கொடியுடைய துரியோதனனை நோக்கி, பரி தட தேர் - குதிரைகள் பூட்டிய பெரிய தேரையுடைய,நரபாலர் பலர்உம் - மனிதர்களைக்காக்கிற அரசர்கள்யாவரும், கேட்க -கேட்கும்படி, 'கை வரு பல் படைக்குஉம் - கைதேர்ந்த பல ஆயுதங்களுக்கும், ஒருவீரர் ஒவ்வா - ஒருவீரரும் ஒப்பாகாத, கட்டு ஆண்மை - உறுதியானபராக்கிரமத்தையுடைய, அரசே - அரசனே! இ களத்தில் - இந்தப் போர்க்களத்தில்,இன்றுஏ - இன்றைக்கே, கொய்வரு தார் - பறித்துத் தொடுக்கப்பட்டமாலைகளையுடைய, புயம் - தோள்களையுடைய, பகவைர் - பகைவர்களது, சிரங்கள்எல்லாம் - தலைகளை யெல்லாம், குறை உடலம் கூத்தாட - கவந்தங்கள்குதிக்கும்படி, கொய்வேன் - அறுப்பேன்,' என்றான் - என்று சொன்னான்,(எ -று.) -பி -ம்: தார்போர்ப். பதினாறுகவிகள் - பெரும்பாலும் ஒன்று இரண்டு ஐந்து ஆறாஞ்சீர்கள் காய்ச்சீர்களும், மற்றையவை மாச்சீர்களுமாகிய எண்சீராசிரியவிருத்தங்கள். (108) 18. | கார்ப்பாகசாதனன்றன்மகனுக்கெல்லாக் கலகமுஞ்செய் வஞ்சனையே கற்றகள்வன், றேர்ப்பாகனாய்நின்றனவனுக்கொப்பார்தேவருலகினு மில்லை திசைகளெல்லா, மார்ப்பாகமோதிவருங்கவனமா நெஞ்சறிவானும்போரில் விரகறி விப்பானும், போர்ப்பாகாய்த்தேர்கடவுசெயல்வல்லானும்புனைதாமச் சல்லியனே புவியி லென்றான். |
(இ-ள்.) கார் - மேகங்களைவாகனமாகவுடைய, பாகசாதனன் தன் - இந்திரனது, மகனுக்கு - குமாரனான அருச்சுனனுக்கு, எல்லா கலகம்உம் செய் - கலகங்களை யெல்லாஞ் செய்கின்ற, வஞ்சனைஏ கற்ற - வஞ்சகங்களையே பழகிய, கள்வன் - திருட்டுத்தனமுடைய கண்ணன், தேர் பாகன் ஆய் நின்றான் -; அவனுக்கு ஒப்பார் தேவர் உலகின் உம் இல்லை-; திசைகள் எல்லாம் - எல்லாத்திக்குகளிலும், ஆர்ப்பு ஆக - ஆரவாரம் உண்டாம்படி, மோதி வரும் - எதிர்த்து வருகிற, கவனம் மா - நடைகளையுடைய குதிரைகளின், நெஞ்சு - மனத்தை, அறிவான்உம் -(சமயத்துக்குஏற்ற) உபாயங்களைத் தெரிவிப்பவனும், போர்பாகு ஆய் - போருக்கு உரிய சாரதியாய், தேர் கடவு செயல் வல்லான்உம் -தேர்செலுத்துந் தொழிலில்வல்லவனுமாகிய, புனை தாமம் சல்லியன்ஏ - அணிந்தபோர்மலையையுடைய சல்லியன்தானே, புவியில் - இவ்வுலகத்தில் (அவனுக்குஒப்பான்), என்றான்-; (எ - று.) - கவனம்- கமநம்; வடசொற்றிரிபு. (109) |