பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்65

24.-அதுகேட்ட சல்லியனது வார்த்தை

வாவுமாமணிநெடுந்தேரரசர்க்கெல்லாம் வாய்ப்பான
                      நீயெனையும்புரப்பதன்றி,
யேவுமாதொழில்புரிந்துன்குடைக்கீழ்வைகு மென்போல்
              வாருனைப்புரத்தலிசைவதொன்றே,
தேவுமாய்மானுடமாய்மற்றுமுற்றுஞ்செப்புகின்றபலகோடி
                                  சராசரங்கள்,
யாவுமாய்விளையாடுமாதிமூர்த்தியாதவனுக்கியானெதிரோ
                                வெதிரிலாதாய்.

இரண்டு கவிகள் - ஒருதொடர்

     (இ-ள்.) எதிர்இலாதாய் - ஒப்பில்லாதவனே! வாவும் - தாவுகின்ற, மா -
குதிரைகள்பூட்டிய, மணி - மணிகள்கட்டிய, நெடு - பெரிய, தேர் - தேரையுடைய,
அரசர்க்குஎல்லாம்-, வாய்ப்பு ஆன - பொருந்தின காவலாகிய, நீ-, எனைஉம் -
என்னையும், புரப்பது அன்றி - காப்பதல்லாமல், ஏவும் ஆ(று) -(நீ) ஏவினபடி,
தொழில் புரிந்து - குற்றேவல்செய்து, உன் குடைக்கீழ்வைகும் - உன் ஆளு
கையின்கீழ்த் தங்குகிற, என்போல்வார் - என்னைப்போல்பவர், உனை புரத்தல் -
உன்னைக் காத்தல், இசைவது ஒன்றுஓ - பொருந்துவதொரு காரியமோ? தேஉம்
ஆய் - சகலதேவஜாதியுமாய், மானுடம் ஆய் - மனித ஜாதியுமாகி, மற்றுஉம் -
இன்னும், முற்றுஉம் செப்புகின்ற - முழுவதுஞ்சொல்லுகிற, பல கோடி -
அநேககோடியாகிய , சர அசரங்கள் யாஉம் ஆய் - அசையும்பொருளும்
அசையாப்பொருளுமாகிய எல்லாமாகி, விளையாடும் - விளையாடுகின்ற, ஆதி
மூர்த்தி - (எல்லாவற்றுக்கும்) முதன்மை வடிவமாகிய, யாதவனுக்கு - யது
குலத்தில்தோன்றிய கண்ணபிரானுக்கு, யான்-, எதிர்ஓ - ஒப்பாவேனோ? (எ -று.)

     நீ சாரத்தியாஞ்செய்த எம்மைக் காக்கவேண்டு மென்று துரியோதனன்
குறிப்பாகவுணர்த்தினதனால் அதனையுணராது, சல்லியன், பாண்டவரைக்
கண்ணன்காப்பதுபோல், அரசரையும்பாதுகாக்கின்ற உன்னைப்பாதுகாப்பது
என்னால்இயலுவதொருசெயலோ? என்று மறுத்துரைத்தான்.             (115)

25.-'கர்ணனுக்குச் சாரத்தியஞ்செய்க' என்று துரியோதனன் வினவிய
சல்லியனிடம் தன்கருத்தை வெளிப்படையாகத்
தெரிவித்தல்.

நேர்செலுத்துந்தனிச்செங்கோலுடையாயாது நினைவுனக்கென்
                          றவன்வினவநிருபன்றானுந்,
தார்செலுத்தும்பெருஞ்சேனைசூழநின்றசல்லியனைமுகநோக்கித்
                                    தனஞ்சயற்குத்,
தேர்செலுத்துமுகுந்தனைப்போனீயுமின்றுதேரிரவிமகன்றிண்டேர்
                                    செலுத்தினல்லாற்,
போர்செலுத்தியைவரையும்வென்றுவாகைபுனைதனமக்கரிதென்று
                                      போற்றினானே.

     (இ-ள்.) 'நேர் செலுத்தும் - நேராக நடக்கின்ற, தனி - ஒப்பற்ற, செங்கோல்
உடையாய் - அரசாட்சிமுறையை யுடையவனே! உனக்கு- ! நினைவு - எண்ணம்,
யாது - என்ன?' என்று-, அவன் வினவ - அச்சல்லியன்கேட்க, நிருபன்
தான்உம் -துரியோதனனும், தார் செலுத்தும் - ஒழுங்காக நடத்தப்படுகிற, பெரு
சேனை-, சூழ -(தன்னைச்) சூழும்படி, நின்ற - (இடையில்) நின்ற, சல்லியனை
முகம்