பக்கம் எண் :

78பாரதம்கன்ன பருவம்

நீயலாற்சமரிலென்னைநிலையிடற்குரியாருண்டோ
தோயலாற்பயந்தகாதற்சூரனையனையசூரா.

     (இ-ள்.) தோயலால் பயந்த - (தான்) புணர்ந்ததனாற்பெற்ற, காதல் சூரனை -
அன்புடைய சூரியனை, அனைய - ஒத்த, சூரா - வீரனே! சாயலால், சிறந்த -
மென்மையால் மிகுந்த, தோகை - தோகையையுடைய சாமளம் - கறுத்த, தட -
பெரிய, புள் - மயிலாகிய பறவையை, ஊர்தி - வாகனமாகவுடைய, சேய் அலால் -
சுப்பிரமணியக் கடவுளேயல்லாமல், தேவர் வாழ்வு - தேவர்களின் வாழ்க்கையை,
தேவருக்கு-, யாவர் ஈந்தார் - வேறியாவர் கொடுத்தார்? (அவ்வாறே), சமரில் -
போரில், என்னை - நிலையிடற்கு - நிலைபெறச்செய்வதற்கு, உரியார் -
உரியவர்கள்,நீ அலால் உண்டுஓ - நீயல்லாமல் (வேறுயாராயினும்) உளரோ?
(எ - று.) -இனி,நீயே வெற்றியளிக்க வல்லாயென்று கர்ணனைநோக்கி கூறியது,
இது "சாயன்மென்மை" என்பது காண்க.                            (140)

50.மித்திரரென்றுநோக்காதென்னுடன்விளைந்தநண்பான்
மத்திரநிருபன்மைந்தன்வந்தெனக்குதவியானான்
குத்திரனல்லன்செம்மைக்கொள்கையன்மறையின்மிக்க
வத்திரசாபம்வல்லானிவனொடாரமர்செய்கிற்பார்.

     (இ-ள்.) மத்திர நிருபன் மைந்தன் - மத்திரநாட்டரசகுமாரனாகிய சல்லியன்,
என்னுடன் விளைந்த நண்பால் - என்னோடு உண்டான சிநேகத்தால், மித்திரர்
என்று நோக்காது - (தனக்குப் பாண்டவர்கள்) உறவினரென்று பாராமல், எனக்கு
வந்து உதவி ஆனான்-; (இவன்), குத்திரன் அல்லன் - வஞ்சகனல்லன்; செம்மை
கொள்கையன் - நல்லொலழுக்கமுடையான்; மறையின் மிக்க - மந்திரங்களாற்
சிறந்த,அத்திரம் - அஸ்திரங்களோடு கூடிய, சாபம் - வில்தொழிலில், வல்லான் -
சமர்த்தன்; இவனொடு ஆர் அமர் செய்கிற்பார் - இவனுடன் எவர்
போர்செய்யவல்லவர்?(எ-று.)- இது, சல்லியன் சிறப்புக்கூறியது.            (141)
 
51.என்மொழிமறாமலின்றுன்னிரதசாரதியுமானான்
நன்மொழியன்றிவேறுநவைமொழிநவிறறேற்றான்
தன்மொழியுதியாவுந்தருமெனக்கைக்கொளாமற்
புன்மொழியாடிநும்மிற்புலப்பதுபுன்மையன்றோ.

     (இ-ள்.) (இன்னும் அவன்), என் மொழி மறாமல் - என்வார்த்தையைத்
தடுக்காமல், இன்று உன் இரத சாரதியும் ஆனான்-; நல் மொழி அன்றி - நல்ல
வார்த்தைகளையே யல்லாமல், வேறு நவை மொழி - (அவற்றிற்கு) வேறாகிய
கெட்டவார்த்தைகளை, நவிறல் தேற்றான் - சொல்லுதல் அறியான்; தன் மொழி -
அவன்வார்த்தை, உறுதி யாஉம் தரூம் என - நன்மைகளையெல்லாங் கொடுக்கும்
என்று, கைக்கொளாமல்- (எண்ணி) அங்கீகரியாமல், புல் மொழி ஆடி -
இழிவானபேச்சுக்களைப் பேசிக்கொண்டு, நும்மில்புலப்பது - உங்களுக்குள்
விரோதப்படுவது, புன்மை அன்றோ - இழிவன்றோ? (எ - று.) - அச்சல்லியன்
நட்புரிமையினாற் பாகனாக, நீவிர் புலத்தல்