வல்விரைந்து, திண்டிறல் - ஒருபொருட்பன்மொழிகள். சோமகனென்பது - திட்டத்துய்மன் மூதாதையின் பெயர். இதுமுதல் பத்துக்கவிகள் - பெரும்பாலும் ஒன்றுமூன்றுஐந்து ஏழாஞ்சீர்கள் மாச்சீர்களும், மற்றையவை கூவிளச்சீர்களுமாகிய எண்சீராசிரியவிருத்தங்கள். (144) 54.- இருதிறத்தாரும் அதிசயிக்கப் பொருதல். சென்றவீரருஞ்சிலைகள்கால்பொரத்திண்சிலீமுகஞ்சேர வேவினார் நின்றவீரருந்தனுவளைத்துமேனெடியசாயநிமிரவீசினார் ஒன்றமாநிலம்பொன்றமீதெழுந்தோதமூர்வதொத்தும்பரஞ்சினார் அன்றையாகவந்தனினிகழ்ந்தபோராரையாரையென்றதிசயிப்பதே. |
(இ-ள்.) சென்ற வீரர்உம் - வந்த சோமகவீரர்களும், சிலைகள் கால் போர் -விற்களின் கோடிகள் வளையும்படி (வளைத்து), திண் சிலீமுகம் - வலிய அம்புகளை,சேர - ஒருசேர, ஏவினார் - எய்தார்கள்; நின்ற வீரர்உம் - (எதிரில்) நின்றகிருதவன்மன் முதலிய வீரர்களும், தனு வளைத்து - வில்லை வணக்கி, மேல் -அவர்கள் மேல், நெடிய சாயகம் - பெரிய அம்புகளை, நிமிர - நெருங்கும்படி,வீசினார் - பிரயோகித்தார்கள்; ஒன்ற - ஒருசேர, மா நிலம் - பெரிய பூமிமுழுவதும், பொன்ற - அழியும்படி, ஓதம் - கடல்வெள்ளம், மீது எழுந்து ஊர்வதுஒத்து - மேலேபொங்கிவருங்காலத்திற்போல, உம்பர் அஞ்சினார் - தேவர்கள்பயந்தார்கள்; அன்றை - அன்றைக்கு, ஆகவந்தனில் - போர்க்களத்தில், நிகழ்ந்த -நடந்த, போர் - யுத்தத்தில், ஆரை ஆரை என்று - யார்யாரையென்று, அதிசயிப்பது- வியந்து புகழ்வது? (எ -று.) (145) 55.- பலவீரரிறத்தல். ஏறுதேரழிந்திவுளிமாவழிந்தேவுபாகழிந்தெண்ணிலெண்ணிலார், நூறு நூறுகோனுழையமெய்யெலாநொந்துதுஞ்சினார்முந்துபோர் செய்தார், வேறுவேறுபல்கோடிவீரர்கண்மேருவொப்பதோர்வில்வளைத் திடச், சூறைமாருதம்போல்விபாகரன்சுதனடாவுதேர்சூழவந்ததே. |
(இ-ள்.) முந்து போர் செய்தார் - முன்னே போர்செய்தவர்களாகிய, எண்ணில் எண்ணிலார் - கணக்குக்கொண்டு எண்ண முடியாத (இரண்டுசேனையிலுமுள்ள) ரதாதிபர்கள், நூறு நூறு கோல் நுழைய - பலபல பாணங்கள்வந்து தைப்பதனால், ஏறு தேர் அழிந்து - (தாம்) ஏறிய தேர்கள் அழியப்பெற்று, இவுளிமா அழிந்து - (அவற்றிற்பூட்டிய) குதிரைகள் அழியப்பெற்று, ஏவுபாகு அழிந்து - (அவற்றைச்) செலுத்துகிற சாரதி அழியப்பெற்று, மெய் எலாம் நொந்து - உடம்புமுழுவதும் வருந்தி, துஞ்சினார் - இறந்தார்கள்; வேறு வேறு பல் கோடி வீரர்கள் - வெவ்வேறுபலகோடிசூரர்கள், மேரு ஒப்பது ஓர் வில்வளைத்திட - மகாமேரு கிரியைப்போல்வதொரு (பெரு வல்) வில்லை (த் தனித்தனி) வளைத்துப்போர் செய்ய,விபாகரன்சுதன் நடாவு தேர் - சூரியகுமாரனான கன்னன் ஏறிய தேர், சூறைமாருதம்போல் - சுழல்பெருங்காற்றுப்போல, சூழவந்தது - சுற்றிச் சுற்றிவந்தது; (எ- று.) |