எண்ணிலார் - (பிறரை) ஒருபொருளாக எண்ணுத லில்லாத வருமாம், வில்லுக்கு மேருவை உவமை கூறுவது, திரிபுரசங்கார காலத்துப் பரமசிவனுக்கு அதுவில்லானதனால். (146) 56.- திட்டத்துய்மன் கர்ணனால்தோற்றுத் தேரோடுஓடல். முட்டவந்துதம்பின்கொடாமன்மேன் முன்கொடுத்துமாமுனை கொள்வாளியிற், பட்டொழிந்தவவ்விருவர்சேனையின் பதிகளுஞ்சயம் படவுடற்றினார், விட்டபாணம்வந்திருவராகமும்வெளியடைக்கவே வில்வளைத்தபின், றிட்டத்துய்மனுங்கன்னனுக்கழிந்தேறுதேருடன்றேறியோடினான். |
(இ-ள்.) பட்டு ஒழிந்த - இறந்தவர்க ளொழிந்த, அஇருவர் சேனையின் - பாண்டவ கௌரவ சேனைகளுக்கு, பதிகள்உம் - தலைவரான திட்டத்துய்மனுங் கன்னனும், முட்ட வந்து - நெருங்க வந்து, தம் பின் கெடாமல் - தமது முதுகைக்கொடாமல், முன் கொடுத்து - மார்பை (அம்புகளுக்கு இலக்காகக்) கொடுத்துக் கொண்டு, மா முனை கொள் வாளியின் - சிறந்தநுனியைக்கொண்ட அம்புகளினால், சயம் பட - வெற்றி உண்டாம்படி, மேல் - மேன்மேலே, உடற்றினார்- போர்செய்தார்கள்; விட்ட பாணம் -(ஒருவர்மேல் ஒருவர்) விட்ட அம்புகள், வந்து- இருவர் ஆகம்உம் - இருவருடம்பு முழுவதையும், வெளி அடைக்க ஏ - மேலேமறைக்கும்படி, வில் வளைத்தபின் - வில்லைவளைத்துப் போர்செய்த பின்பு,(அப்போரில்), திட்டத்துய்மனும்-, - கன்னனுக்கு-, அழிந்து - தோற்று, ஏறு தேருடன்- தானேறிய தேருடனே, தேறி ஓடினான் - உயிர்தப்பி ஓடிப்போனான்; (எ -று.)-ஏறுதேருடன் அழிந்து என இயைப்பினுமாம். பி - ம்: கன்னனுக்கிடைந்து. (147) 57.- தருமன்கட்டளையால் வீமன் கர்ணன்மேற் செல்லல். சோமகேசரிற்பட்டொழிந்தவெஞ் சூரர்தம்முடன்றுரோண சூதனன், காம்பாணமேயெனவிலக்கருங்கணை கண்மெய்யுறக்கை கழன்றபின், றாமமார்முடித்தம்முனேவலிற்றன்னையொத்ததோள்வீரர் தம்மொடும், வீமசேனன்மற்றவரைவென்றபோர்விசயகன்னன்மேல் வெய்தினெய்தினான். |
(இ-ள்.) காம பாணம்ஏ என - மன்மதபாணங்களேபோல, விலக்க அரு - தடுத்தற்கு அரிய, கணைகள் - (கன்னன்விட்ட) அம்புகள், மெய் உற -(தம்) உடம்பில்தைத்தலினால், துரோண சூதனன் - துரோணரைக் கொன்றவனாகிய திட்டத்துய்மன்,சோமகஈசரில்- சோமககுலத்தலைவர்களுள், பட்டு ஒழிந்த - இறந்தவர்கள்போகமிகுந்த, வெம் சூரர்தம்முடன் - கொடிய வீரர்களுடனே, கை கழன்ற பின் -ஓடிப்போனபின்பு,- தாமம் ஆர் முடி - பூமாலைபொருந்திய முடியையுடைய,தம்முன் - தன்தமையனான தருமனது, ஏவலின் - கட்டளையினால், வீமசேனன் -,தன்னை ஒத்த தோள் வீரர்தம்மொடு உம் - தனக்குச்சமமானமான புஜபலத்தையுடைய வீரர்களோடு, அவரை வென்ற போர் - திட்டத்துய்மன் முதலியோரைச் சயித்த |