பக்கம் எண் :

86பாரதம்கன்ன பருவம்

ஒத்த, விண் புயம்உம் - அழகிய தோள்களிலும், வியன்மார்பம்உம் - அகன்ற
மார்பிலும், ஊடுஉற - துளைக்கும்படி, வன்பு பெறு பல வாளிகள் - வலிமைபெற்ற
பல பாணங்களை, ஏவலும் - (விடசேனன்) ஏவினவளவில், நண்பொடு - இவனோடு
ஒப்ப, அவன்  சாத்தகி, இவன் ஏறிய - விடசேனன் ஏறின, தேர் - தேரும், கொடி-
கொடியும், நல் புரவி - சிறந்த குதிரைகளும், குடை - குடையும், பாகு - பாகனும்,
இவை - ஆகிய இவையெல்லாம், வீழ்தர - விழும்படியாகவும், வாகுஉம் மார்புஉம்-
தோள்களிலும் மார்பிலும், ஒண் பிறையின் முகம் ஆன - ஒளி பொருந்திய
பிறைச்சந்திரன்போன்ற நுனியையுடைய, சிலீமுகம் ஒன்பது - ஒன்பதுபாணங்களை,
உதையினன் - தொடுத்தான்; (எ - று.)- ஸ்ரீஞ்ஜிதம் - அசைகின்ற
ஆபரணங்களினாலெழும் ஒலி: வடசொல்.                            (155)

65.- சோழனும் மாகதனும் யானைமீதிருந்து பொருதல்.

குன்றினருவிகள்போன்மததாரைகள்கொண்டகடதட
                            வாரணமாமிசை
சென்றுசிலகணையேவினரோரிரு சிந்துகிரணதிவாகரராமென
வின்றுவயலுழுவீர்புதுநீர்வரு மென்றுவரிமணலேகுறிகூறிட   
வன்றுவருகுடகாவிரிநாடனுமம்பொன்வரிகழன்மாகதர்கோவுமே.

     (இ - ள்.) 'வயல்உழுவீர் - கழனிகளை உழுது பயிர்செய்பவர்களே!
இன்றுபுது நீர் வரும் - இன்றைக்குப் புதுவெள்ளம் வரும்', என்று -, வரிமணல்ஏ-
அடர்ந்தமணல்களே, குறிகூறிட - (முன்னே) குறிசொல்ல, அன்றுவரு - அன்றைக்கே
(தவறாமல்வெள்ளம்) வரப்பெறுகின்ற, குட காவிரி - மேற்கிலுற்பத்தியாகிற
காவேரிநதிபாய்கின்ற, நாடன்உம் - நாட்டையுடைய சோழனும், அம் பொன் வரி
கழல் -அழகிய பொன்னினாலாகிய கட்டப்பட்டவீரக்கழலையுடைய, மாகதர்
கோஉம் -மகதநாட்டார்க்குத் தலைவனானசாதேவனென்பவனும், குன்றின்
அருவிகள்போல் -மலையினின்று பெருகுகிற நீரருவிகள்போல, மததாரைகள்
கொண்ட -மதநீர்ப்பெருக்கைக் கொண்ட, கட தடம் - கபோலங்களி
னிடத்தையுடைய, வாரணம்மாமிசை - யானையாகிய விலங்கின்மேலேறி, சென்று -
போய் , சிந்து கிரணம் -வீசுகிற கிரணங்களையுடைய, ஓர் இரு திவாகரர் ஆம்
என - இரண்டுசூரியர்கள்போல, சில கணை ஏவினர் - சிலபாணங்களைப்
பிரயோகித்தார்கள்; (எ-று.)

     குன்று - யானைக்கும், அருவி - மதத்துக்கும், திவாகரர் - சோழ
சாதேவர்க்கும், கிரணம்  அம்புக்கும் உவமை. இரு  திவாகரர் - இல்
பொருளுவமை.காவிரி - வடசொற்றிரிபு; கவேரமென்னும் மலையினின்று உண்டான
தென்றும்,கவேரெனன்னும் அரசனது மகனென்றும் பொருள். மகதராஜன் பெயர்,
மேல் 69 -ஆங் கவியால் விளங்கும், கீழ்ப் படையெழுச்சிச்சருக்கத்தில்
பாண்டவர்பக்கத்தும்,கௌரவர்பக்கத்தும் மகததேசத்தரசர் துணையாய் வந்தனர்
என்று கூறியிருத்தலால்,இங்குக் கூறியவன் மகததேசத்து அரசர்களுள்
துரியோதனாதியர்பக்கஞ் சேர்ந்தசாதேவனென்பவ னென்றும், கீழ்ச்சருக்கத்தில்
35 - ஆம் கவியில் கூறியவன்பாண்டவர் பக்கஞ் சேர்ந்தானொரு மகதநாட்டசர
னென்றும் அறிக.                                                (156)