பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்93

இரண்டு என்ன - இரண்டுமலைகள்போல (வலிய), திரண்ட தோள் உம் -
திரட்சியாகவுள்ள தோள்களையும், நிலைஉம் - (போருக்கு நின்ற) நிலையையும்,
குறிப்புஉம் - (அம்புஎய்தற்கு) லட்சியம்பார்த்தலையும், சிறு நாண் ஒலி - சிறிய
நாணியின் ஒசை, நின்ற ஆறு உம் - பொருந்திய விதத்தையும், மலையும்
திறல்உம் -போர்செய்யும் வன்மையையும் (பார்த்து), அண்டர்உம் - தேவர்களும்,
புகழ்ந்து -துதித்து, வாழ்த்தினார்- (கண்ணெச்சில்படாம லிருக்கவென்று)
ஆசீர்வாதமுஞ்செய்தார்கள்; (எ -று.)- 'தேவரும் புகழ்ந்து வாழ்த்தினார்' எனவே,
மனிதர் புகழ்ந்துவாழ்த்தினமை தானே பெறப்படும்.                   (170)

80.- கர்ணன் தருமன்மார்பிலும் தோளிலும் அம்புஎய்தல்.

தாழங்குறித்துக்கரைசெய்யுந்தரங்கவேலை
யாழம்புராசியெழுபார்தனியாளநிற்போன்
சூழம்பொன்மாலைத்துணைத்தோள்களினெட்டுமார்பி
னேழம்புமெய்தானிருள்காயுமிரவுமைந்தன்.

     (இ - ள்.) தாழம் - தாழைமரங்கள், குறித்து - வரிசையாகத் தோன்றி,
கரைசெய்யும் - (சுற்றிலும்) கரையைச் செய்கிற, தரங்கம் வேலை - நீர்
அலைகளையுடைய, ஆழ் - ஆழமான, அம்புராசி - கடல்களாற் சூழப்பட்ட,
எழுபார் - ஏழுதீவுகளைம், தனி ஆள - தனியே அரசாளுதற்கு, நிற்போன் -
நிற்பவனாகிய தருமனது, அம் பொன் மாலை சூழ் - அழகிய பொன்மயமான
ஆரங்கள் பொருந்திய, துணி தோள்களின் -இரண்டு தோள்களிலும், எட்டுஉம் -
எட்டுஅம்புகளையும், மார்பின் - மார்பிலே, ஏழ் அம்புஉம் - ஏழம்புகளையும்,
இருள்காயும் இரவி மைந்தன் - இருளை யழிக்கிற சூரியனது மகனான கர்ணன்,
எய்தான்-;(எ -று.)

     தாழம் - ஐயீற்றுமரப்பெயர் ஈறுகெட்டு அம்முச்சாரியை பெற்றது. தாழம்
என்பதைத் தொழிற்பெயராகக் கொண்டு, தாழம் - தாழ்தலை [சாந்தமாதலை],
குறித்து- எண்ணி, கரை செய்யும் - கரையிற் செல்லுகிற, தரங்கம் என்பாருமுளர்.
'தாழங்குரித்து' என்னும் பாடத்திற்கு, தாழ் - தாழைகள், அங்குரித்து - முளைத்து
என்க. பி - ம்: இறைவன்.                                        (171)

81.- தருமன் அம்பெய்து கர்ணனது புயங்கீறிச்
 சிலையும் வீழ்த்தல்.

தன்றோளுமார்புஞ்சரமூழ்கவெஞ்சாபம்வாங்கி
நின்றோனைவாய்மைநிலைநின்றநிருபரேறும்
வன்றேளுறநாண்வலித்தோரிருவாளியேவிச்
சென்றோரிமைப்பிற்புயங்கீறிச்சிலையும்வீழ்த்தான்.

     (இ - ள்.) தன் தோள்உம் - தனது தோள்களிலும், மார்புஉம் - மார்பிலும்,
சரம் மூழ்க - அம்புகள் அழுந்தும்படி, வெம் சாபம் வாங்கி நின்றோனை - கொடிய
வில்லை வளைத்துநின்ற கர்ணனை, வாய்மை நிலை நின்ற - சத்தியத்தில் தவறாமல்
நிலையாய் நின்ற, நிருபர் ஏறு உம் - அரசர்களுக்கு ஆண்சிங்கம்போன்ற தருமனும்,
சென்று - (எதிரிற்) போய் வல் தோள் உற - வலிய தோளிற் படும்படி, நாண்