முகிலுக்குக் கடவுட்டன்மை - உலகமும் அதற்கு உறுதியாகிய அறம் பொருள் இன்பங்களும் நடத்தற்கு ஏதுவாதல், 'கிருதவன்மன் கருது' என்ற பாடமிருப்பின், செய்யுளோசையினிதாகிச் சந்தவிருத்த மென்னலாமெனத்தோன்றுகின்றது. முடுகி, ஒத்து குறுகினன் என்க. இதுமுதல் ஆறுகவிகள் - பெரும்பாலும் ஒன்று மூன்று ஐந்து ஏழாஞ்சீர்கள் கருவிளச்சீர்களும், இரண்டு ஆறாஞ்சீர்கள் கூவிளங் காய்ச்சீர்களும், நான்கு எட்டாஞ்சீர்கள் கருவிளங்காய்ச்சீர்களுமாகிய எண்சீராசிரியவிருத்தங்கள். இதுமுதற் பத்துக்கவிகள் அந்தாதித் தொடையுடையன. (176) 86.- தருமன் கர்ணனுடன் பொருதமை. தருமன்மைந்தன்பரிதிபுதல்வனைக்குறுகியிருசரமவன்செங்கை வரிசிலைதுணித்திடவுமெதி, ரிருசரந்துன்றியுயர்கொடியறுத்திடவுமுடனிருசரஞ்சென்றுதனியிர மொட்டிடறிடவு. மொருசரம்பொங்குதிறல்வலவன்மெய்ப்புதைதரவுமொருசரந்திண் கவனதுரகதத்துரனுறவும், வரமிகுந்துங்கதனுவினைவளைத்தெரிகொள்சிலவடிசரங் கொண்டவனதிருபுயத்தெழுதினனே. |
(இ-ள்.) தருமன் மைந்தன்-, பரிதி புதல்வனை குறுகி -, இரு சரம் - இரண்டுஅம்புகள், அவன் - அக்கர்ணனது, செம் கை - சிவந்த கையிற்பிடித்த, வரிசிலை -கட்டமைந்த வில்லை, துணித்திடஉம் - துண்டாக்கவும், இரு சரம்-, எதிர் துன்றி -எதிரே நெருங்கி, உயர் கொடி - உயர்ந்த துவசத்தை, அறுத்திடவும்-, இரு சரம்-,உடன் சென்று - விரைந்துபோய், தனி - ஒப்பில்லாத, இரதம்மொட்டு - தேரின்கொடிஞ்சி யென்னும் உறுப்பை, இடறிடஉம் - தள்ளிடவிடவும் - ஒருசரம்-, ஓர்அம்பு, பொங்கு திறல் - மிகுந்தவல்லமையையுடைய, வலவன்-பாகனான சல்லியனது,மெய் - உடம்பில், புதைதர உம்-நன்றாகத்தைக்கவும், ஒருசரம்-,திண் - வலிய,கவனம் - விரைந்து செல்லுதலையுடைய, துரகதத்து - குதிரைகளின், உரன் - மார்பில், உறஉம் - பொருந்தவும், வரம் மிகும் - சிறப்பு மிகுந்த, துங்க தனுவினை - உயர்ந்த வில்லை, வளைத்து-, எரி கொள் - நெருப்பை (உவமையாக)க் கொண்ட, சில வடி சரம் கொண்டு - சில கூரிய அம்புகளால்;அவனது இரு புயத்து - அவனுடைய இரண்டு தோள்களிலும், எழுதினன் - கிளறினான்; (எ - று.)- துர கதம்- விரைந்து செல்வது: காரணக்குறி.மொட்டு - குமிழ்வடிவான கூம்பு என்பாருமுளர். (177) 87.- தருமன் வடகலிங்கர் முதலியோரையோட்டிப் பலரையும் விண்புகச் செய்தமை. வடிசரங்கொண்டவன்திருபுயத்தெழுதியபின் வடகலிங்கங்கு குரமகதமொட்டியமுதல, படிதொறுந்தங்கள்குடைநிழல்பரப்பியவரசர்பலருடன்பைம் பொன்முடிமகுடவர்த்தனர்பலரு, மிடிமுழங்குங்குரலினதிபயத்தொடுபிலனிலிழிபுயங்கங்களென வொருவருக்கொருவர்நடை, யடிதளர்ந்தஞ்சலியுமுதுகுமிட்டவரொழியவடையவன்றும்பர் பதிகுடிபுகப்பொருதனனே. |
(இ - ள்.) வடி சரம் கொண்டு அவனது இரு புயத்து எழுதிய பின் -, வட கலிங்கம் - வடக்கே யுள்ள கலிங்கதேசமும், குகுரம்- குகுரதேசமும், மகதம் - மகததேசமும், ஒட்டியம் - ஒட்டியதேசமும், |