காணப்பொருதவாளி, எரிபுவனநுகர்ந்ததுபோலித்தடமும் புகையா முனெழுந்திராயே. |
(இ -ள்.) திரிபுவனங்களும் - மூன்று உலகங்களிலும், சேர - ஒருசேர, செங்கோன்மை செலுத்திய - ஆளுகையை நடத்திய, நின்சீர்த்தி-உனது மிக்க புகழ், இந்த விரி புவனந்தனில் ஒளித்தால் - இந்தப் பரவியநீரிலே (நீ) ஒளித்துக்கொண்டதனால், மிகுவசை ஆய் போகாதோ - மிக்கபழிப்பாய்விடாதோ? வெருவலாமோ - (இவ்வாறு நீ) அஞ்சலாமோ? புரிபுவனம் உண்டு உமிழ்ந்தோன்- (தான்) படைத்த உலகங்களை விழுங்கியுமிழ்ந்தவனாகிய திருமால் [இராமபிரான்], போர் இலங்கை வழி காண- போர்செய்தற்குரிய இலங்கைக்குச் செல்லும்வழியைக் காணும்பொருட்டு,பொருத - (சமுத்திரராசன் மேற்) செலுத்திய, வாளி எரி - ஆக்கினேயாஸ்திரம்,புவனம் நுகர்ந்ததுபோல் - (அக்கடலின்) நீரை உறிஞ்சத் தொடங்கியதுபோல,இ தடமும் புகையாமுன் - இந்தத் தடாகமும் (என் அஸ்திரத்தால்) புகைந்துஎரிந்துபோவதற்குமுன்னமே, எழுந்திராய் - வெளிப்பட்டு வருவாய்; (எ - று.) நீஇப்பொழுது விரைவில் வெளிவாராயாயின் இராமபிரான், ஆக்கிநேயாஸ்திரப்பிரயோகஞ்செய்து கடலை வற்றச்செய்யலுற்றாற்போல யான்இப்பொய்கையை நீர்வற்றச்செய்து அதனுட் கிடக்கும் உன்னை யொழிப்பேனென்பதாம். இராமபாணம் கடலை வெதுப்பிய வரலாறு, கீழ் 74 -ஆங் கவியிற் கூறப்பட்டது.
த்ரிபுவநம் - சுவர்க்கம் பூமி பாதாளம் என்பன; 'திரிபுவனங்களுஞ் சேரச்செங்கோல்செலுத்திய' என்றது சீர்த்திக்கு அடைமொழி; மூவுலகத்திலும் தடையறப் பரவிய புகழென்றபடி. இங்கே, செங்கோன்மை செலுத்துதல் - தடையறச்சென்று நிலைபெறுதல். "சீர்த்திமிகுபுகழ்" என்ற தொல்காப்பியத்தால்,சீர்த்தி யென்பது பெரும்புகழையுணர்த்துவதோர் உரிச்சொல்லா மென்றும்,புகழ்மாத்திரத்தை யுணர்த்தும் கீர்த்தியென்னும் சொல்லின் திரிபன்றென்றுங்கொள்க. 'புவனம் உலகும் புனலும் புவியுமாம்" என்ற பிங்கலந்தையினால்,புவனமென்பது - உலகும் நீருமாதலையறிக. (137) 138.-அவைகேட்டுத்துரியோதனன் நீரினின்று வெளியெழுதல். பாவனனிப்படியுரைத்தபழிமொழியுந்தனதுசெவிப்பட்டகாலை சீவனமுற்றையும்விடுவோனிருக்குமோமறையுடனேசேரவிட்டான் ஆவனமற்றறியாமலழிவனமற்றறியாமலடுத்தோராவி வீவனமற்றறியாமனினையுநினைவினுக்குவமைவேறிலாதான். |
(இ -ள்.) பாவனன் - வாயுகுமாரனான வீமன், இ படி உரைத்த - இவ்வாறுசொன்ன, பழி மொழியும் - நிந்தனைச்சொற்கள்யாவும், தனது செவி பட்ட காலை - தன்னுடையகாதிற்பட்டபொழுது, ஆவனஅறியாமல் - (தனக்கு) நன்மைவிளைப்பவை இன்னவையென்று |