பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்105

அறியாமலும்,அழிவன அறியாமல் - (தனக்குத்) தீமைவிளைப்பவை
இன்னவையென்று அறியாமலும், அடுத்தோர் ஆவி வீவன அறியாமல் -
தன்னைச் சார்ந்தவர்களது உயிர்கள் அழிந்து விடுவனவென்பதையும்
அறியாமலும், நினையும் - (தான்மனத்திலே மிகுதியாக) எண்ணுகிற,
நினைவினுக்கு - தீயசிந்தனைகளுக்கு, வேறு உவமை இலாதான் - வேறு
ஒப்புமை பெறாதவனான துரியோதனன், - மறையுடனே சேர விட்டான் -
மந்திரஜபத்துடனே (நீரையும்) ஒரு சேர விட்டிட்டான்; சீவனம் முற்றையும்
விடுவோன் இருக்குமோ - சீவனம் முழுவதையும் விட்டொழியுமவன்
(அச்சீவனத்தினுள்ளே) இருப்பானோ? [இரானென்றபடி]; (எ - று.)

    'ஜீவநம்' - உயிர்வாழ்க்கையென்றும் நீரென்றும் பொருள்படுதலால்,
அச்சொல்லில் சமத்காரங்கற்பித்து, 'சீவனம் முழுதையும் ஒழியுமவன்
அச்சீவனத்தின் ஒரு பகுதியிலே ஒளித்திருப்பானோ?" என்று சிலேடையால்
நயம்படக்கூறினான்.  பாவநன் - பவநனது குமாரன்; பவநன் - வாயு.
பின்னிரண்டடிகளில், துரியோதனனது அவிவேகத்தையும்
வரும்பொருளாராய்ச்சி யின்மையையும், அவன் குணத்தையும்,
தீயசிந்தனையையும் வெளியிட்டார்.                          (138)

139.-துரியோதனன்நீர்நிலையினின்று வெளியெழுதலைப்
பற்றிய வருணனை.

நீளமுறப் பரவையுற வாளமுறக்கரைபரந்து நிமிர்ந்த நீத்தம்,
நாள மலர்ப் பொய்கையினின் றெழுவான்மெய்ச் சுருதிமறை
                                   நவிலுநாவான்,
காளநிறக் கொண்டல்பெருங் கடன்முழுகிவெள்ளமெலாங்
                                  கவர்வுற் றண்ட,
கோளமுறக் கிளர்ந்ததுபோற்றோன்றினான்மணியுரகக்
                                  கொடியினானே.

     (இ -ள்.) மெய் சுருதி மறை - சத்தியமான வேதமந்திரத்தை,
நவிலும் -உச்சரிக்கிற, நாவான் - நாக்கையுடையனாயிருந்த, மணி உரகம்
கொடியினான்- மாணிக்கத்தையுடைய பாம்பின் வடிவமெழுதிய கொடியுடைய
துரியோதனன்,-நீளம் உற - நீட்சிமிகவும், பரவை உற - பரப்பு மிகவும்,
வாளம் உற -வட்டவடிவம் பொருந்தவும், கரை பரந்து நிமிர்ந்த நீத்தம் -
கரையின்மேற்பரவியெழுந்து வழிகிற வெள்ளத்தையுடைய, நாளம் மலர்
பொய்கையினின்று - உட்டுளையுள்ள தண்டையுடைய தாமரைநிறைந்த
தடாகத்தினின்று, எழுவான் - மேலெழுபவன்,- பெருகடல் முழுகி - பெரிய
கடலினுள்ளேமூழ்கி, வெள்ளம்எலாம் கவர்வுற்று - நீரைநிரம்பக்கிரகித்து,
அண்ட கோளம் உற - ஆகாய முகட்டையளாவ, கிளர்ந்தது -
மேலெழுந்ததான, காளம் நிறம் கொண்டல் போல் - கருநிறமுடைய
மேகம்போல, தோன்றினான் - காணப்பட்டான்; (எ - று.)

    அக்குளத்தின் நீட்சி பரப்பு ஆழம் வட்டவடிவம் நீர்மிகுதி
யென்பவையும் துரியோதனனது கருநிறமும் தோன்ற, துரியோதனன்