போம்படியானவர்;இவர் இருவர் சேர்ந்தால், ஒருசமரதனுக்கு ஒப்பாவர். (5) 6. | மன்பட்டவர்த்தனரு மணிமகுடவர்த்தனருமுறையால் வணங்க வொளிகால், நன்பட்டமுந்தனதுகையாலணிந்துபடைநாலுக்குநாயகமெனா, மின்பட்டவோடைநுதலிபராசன்வன்பிடரின்மிசைவைத் துகந்தனனரோ, என்பட்டதப்பொழுதுகுருசேனை மெய்ப்புளகமெழவொண் கண்முத்தமெழவே. |
(இ -ள்.) மன் - பெரிய, பட்டவர்த்தனரும் - பட்டந்தரித்து அரசாளும்அரசர்களும், மணி மகுடவர்த்தனரும் - அழகிய கிரீடந்தரித்து அரசாளும்அரசர்களும், முறையால் வணங்க - முறைப்படி வணங்கும்படி, படைநாலுக்கும் நாயகம் எனா-நால்வகைச் சேனைக்கும் (இவனே) தலைமைபூண்பவனென்று சொல்லி, ஒளி கால் நல் பட்டமும் தனது கையால் அணிந்து - ஒளியை வீசுகிற அழகிய (சேனாபதிக்கு உரிய) பொற்பட்டத்தையும்தனதுகையால் (அவனது நெற்றியிலே) கட்டி, மின் பட்ட ஓடை நுதல் இபராசன் வல் பிடரின் மிசை வைத்து-மின்னல் போன்ற ஒளிபொருந்தியபொற்பட்டத்தையணிந்த நெற்றியையுடைய சிறந்த பட்டத்துயானையின்வலியபிடரியிலே (சல்லியனையேறி) வீற்றிருக்கச்செய்து, உகந்தனன் -(துரியோதனன்)மகிழ்ச்சிகொண்டான்; அப்பொழுது-, குருசேனை-கௌரவசேனை, மெய் புளகம் எழ - உடம்பில் மயிர்ச்சிலிர்ப்பு உண்டாகவும்,ஒள்கண் முத்தம் எழ - விளங்குகிற (தமது) கண்களில் ஆனந்தக்கண்ணீர்தோன்றவும், என் பட்டது - என்னமகிழ்ச்சி யடைந்தது! [மிக மகிழ்ந்ததென்றபடி;] (எ - று.)-அரோ - ஈற்றசை.
இனிஎல்லாவீரரும் சல்லியனுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்படி துரியோதனன் அவனைச் சேனைத்தலைவனென்று சொல்லிப் பட்டங்கட்டிப் பட்டத்து யானையின்மே லேற்றி மகிழ, அவனது சேனையிலுள்ளார் யாவரும் மிகவும் மகிழ்ச்சிகொண்டன ரென்பதாம். பட்டவர்த்தனர் - கிரீடமில்லாமல் நெற்றிப்பட்டம் மாத்திரந்தரித்து அரசாளுபவர். மகுடவர்த்தனர் - கிரீடந்தரித்து அரசாளுபவர். படைநால் - யானை தேர் குதிரை காலாளென்னுஞ் சதுரங்கம். சிறந்ததை அரசனென்றல் மரபாதலின், 'இபராசன்'என்றார்; உயர்திணை யாண்பாலாற் கூறியதும் சிறப்பையே காட்டும். குருஎன்பவன் - சந்திர குலத்திற் பிரசித்திபெற்ற ஓர் அரசன்; அவனால் அக்குலம்குருகுலமென்றும், அந்நாடு குருநாடென்றும், அக்குலத்தவர் கௌரவரென்றும்பெயர்பெறுதல் காண்க. இங்கே, அக்குலத்தாரான கௌரவரது சேனை,குருசேனை யெனப்பட்டது. பாண்டவரும் குருகுலத்தாராயினும், குருநாட்டின்அரசுரிமை பெற்றுள்ளவன்துரியோதனனாதலால், குருசேனை யென்றதுஅவன்சேனையேயாம். நாயகம் - நடுநாயகமணிபோலச் சிறந்தவ னென்றவாறுமாம். ஓடை -யானையின் நெற்றிப்பட்டம்: முகபடாம், சூழியெனப்படும். முத்தம் - முத்துப்போன்ற நீர்த்துளிக்கு உவமவாகுபெயர். (6) |