பக்கம் எண் :

112பாரதம்சல்லிய பருவம்

ரோடுசேர்ந்தும் பொரேன்' என்று சொல்லித் தனது வில்லை இரண்டு
துண்டாக முறித்துப் போகட்டுவிட்டுப் பாரதயுத்தம் நடக்கையில் அங்கு
இராமல் பலராமனுடன் தீர்த்தயாத்திரை சென்றிட்டனனென்க.  மேதக
எதிர்கொள்ளுதல் - மிக்கமரியாதையுடன் விசேஷ உபசாரங்களைச் செய்து
எதிர்கொள்ளுதல்.                                         (147)

148.-கண்ணனும் மற்றையோரும்அவர்கள் வரவைப்
பாராட்டுதல்.

மதுரைநகர்க்கரசானமாயனுந்தம்முனைவணங்கி
விதுரனையுமெய்தழுவவேல்வேந்தரனைவோரும்
கதிரவரோரிருவரையுங்கண்டுகளிப்பவர்போல
எதிரெதிர்போய்க்கைதொழுதாரிகலாண்மைக்கெதிரில்லார்.

     (இ -ள்.) மதுரை நகர்க்கு அரசு ஆன - மதுராபுரிக்குத்தலைவனான,
மாயவனும் - கண்ணபிரானும், தம் முனை வணங்கி - தனது தமையனான
பலராமனை நமஸ்கரித்து, விதுரனையும் மெய் தழுவ - விதுரனை உடம்பை
ஆலிங்கனஞ் செய்தருள, இகல் ஆண்மைக்கு எதிர் இல்லார் - பல
பராக்கிரமங்களில் தமக்குச் சமமில்லாதவர்களாகிய, வேல் வேந்தர்
அனைவோரும் - வேல்முதலிய  ஆயுதங்களில் வல்ல அரசர்களெல்லோரும்,
கதிரவர் ஓர்இருவரையும்கண்டு களிப்பவர்போல - ஒளியையுடையவரான
(சந்திரன் சூரியன் என்ற) இரண்டு பேரையும் பார்த்து மகிழ்பவர்போலப்
பலராமனையும் விதுரனையுந் தரிசித்ததனால் மனமகிழ்ந்து, எதிர் எதிர்
போய்கைதொழுதார் - (தாம்தாம்) எதிர்கொண்டு சென்று கைகூப்பி
வணங்கினார்கள்;

     இங்கேமதுரை யென்றது, வடமதுரையை.  அதில் அரசாண்டு நின்ற
கம்சனைக் கொன்று கண்ணன் அந்நகர்க்குத் தலைமைபெற்றனனென அறிக.
மது என்பவனால் ஏற்படுத்தப்பட்டதனாலும், அழகியதாயிருத்தலாலும்,
அந்நகர்க்கு, 'மதுரா' என்று பெயர்; அது மதுரையென ஈறுதிரிந்தது. விதுரன்
- ஞானமுடையவ னென்று காரணப்பொருள்படும்.  தம்மினும்  மேலோரை
வணங்குதலும், கீழோரை ஆசீர்வதித்தலும், சமமானவரைத்
தழுவியணைத்தலும், மரியாதை.                                (148)

149.-தீர்த்தயாத்திரைவரலாற்றை அவ்விருவருங் கூறுதல்.

அன்றுமுதலேகியநாளளவாகவிருவோரும்
குன்றிடமுங்கடலிடமுங்குறித்தநதிகளினிடமுஞ்
சென்றுசுரரும்படியுந்தீர்த்தங்கடிசைதோறும்
ஒன்றுபடமகிழ்ந்தாடிமீண்டவாறுரைசெய்தார்.

     (இ -ள்.) அன்று முதல் - (பிரயாணம் புறப்பட்டுச்சென்ற) அந்நாள்
முதல், ஏகிய நாள் அளவு ஆக, மீண்டுவந்த இந்நாள் வரையிலும்,
திசைதோறும் - ஒவ்வொருதிக்கிலும், குன்று இடமும் -
மலைகளினிடங்களிலும்,கடல் இடமும் - கடல்களினிடங்களிலும்,
குறித்தநதிகளின் இடமும் -(சிறந்தவையென்று) குறிக்கப்பட்ட
நதிகளினிடங்களிலும், சென்று - போய்,சுரரும் படியும் தீர்த்தங்கள் -