152.-அதற்குக் கண்ணன் கூறும்விடை. வீமனுக்கும் வீமனுடன்வெகுண்டமர்செய் வலம்புரிப்பூந் தாமனுக்குமமர் புரியுந்தலமேதென்றுயாவுகின்றோம் நீமனத்தினிகழ்ந்தபடிநிகழ்த்துகெனநிலவொளியாற் சோமனுக்கு நிகரானோனிளவலை நீசொல்லென்றான். |
(இ -ள்.) 'வீமனுக்கும்-, வீமனுடன் வெகுண்டு அமர் செய் - வீமனோடுகோபித்துப் போர்செய்யும், வலம்புரிப்பூ தாமனுக்கும் - நஞ்சாவட்டைப்பூமாலையையுடைய துரியோதனனுக்கும், அமர் புரியும் - போர்செய்யத்தக்க,தலம் - இடம், ஏது - எது? என்று - என்பதைக்குறித்து, உயாவுகின்றோம் -ஆராய்ச்சிசெய்கிறோம்; நீமனத்தில் நிகழ்ந்தபடி நிகழ்த்துக - (அதைக்குறித்து)உன்மனத்திலுள்ள கருத்தை நீ கூறுவாய்,' என - என்று (கண்ணன் பலராமனைநோக்கிக்) கூற, - நிலவு ஒளியால் சோமனுக்கு நிகர் ஆனோன் - விளங்குகிற(தனது வெண்ணிறமான) தேககாந்தியால் சந்திரனுக்கு ஒப்பான பலராமன்,இளவலை - (தனது) திருத்தம்பியான கண்ணபிரானை நோக்கி, நீ சொல்என்றான் - நீயே (உன்கருத்தின்படி) கூறுவாயென்றான்; (எ - று.) பலராமன் வெண்ணிறமுடையனாதலால், 'நிலவொளியாற் சோமனுக்கு நிகரானோன்' என்றார்; அவன் வெள்ளைநிறமுடைமை பிரசித்தம். உயாவுதல்=உசாவுதல். (152) 153.-இதுவும், அடுத்தகவியும்-குளகம்; கண்ணன் போர்க்களங்குறித்தல். தாவெழுமா மணிநெடுந்தேர்த்தபனனிகர் மழுப்படையோன் மூவெழுகான் முடிவேந்தரனைவரையு முடிப்பித்து நாவெழு பான்மையினுடையோன்களிக்க நரமேதஞ்செய் பூவெழுதீவினுஞ்சிறந்துபொன்னுலகோ டொத்துளதால். |
(இ -ள்.) தாவு - தாவிச்செல்லுகிற, எழு மா - ஏழுகுதிரை பூண்ட, மணிநெடு தேர் - அழகிய பெரிய தேரையுடைய, தபனன் - சூரியனை, நிகர் -ஒத்து விளங்குகிற, மழு படையோன் - கோடாலியை ஆயுதமாகவுடையபரசுராமன், மூ எழு கால் - இருபத்தொருதலை முறை, முடி வேந்தர்அனைவரையும் - கிரீடாதிபதிகளான அரசர்களெல்லாரையும், முடிப்பித்து -அழியச்செய்து, நாஎழு பான்மையின் உடையோன் களிக்க - நாக்கைஏழுபகுதியாகவுடைய அக்கினி தேவன்மகிழும்படி, நரமேதம்செய்- நரமேதம்பண்ணின, பூ - இடம், எழு தீவினும் சிறந்து - ஏழுதீவுகளுள்ளுஞ் சிறப்புற்று, பொன் உலகோடு ஒத்து உளது - சுவர்க்கலோகத்தோடு ஒத்துள்ளது; சந்திரவமிசத்துப்பிறந்த அரசனும் பலபராக்கிரமங்களிற்சிறந்தவனும் ஆயிரந்தோள்களுடையவனும் இராவணனைஒருகால்வென்றிட்டவனுமான கார்த்தவீரியார்ச்சுனன் ஜமதக்நிமுனிவனது ஓமதேனுவைக் கவர்ந்தது காரணமாக அம்முனிவனது குமாரனான பரசுராமன் |