பக்கம் எண் :

132பாரதம்சல்லிய பருவம்

உடம்பையும்உதறிக்கொண்டு, மனோ வீரம் உற்று -
மனத்தைரியத்தையடைந்து, மீளவும் - மறுபடியும், அருகு ஒரு பால் மேவி
நிற்கும் வீமனை - சமீபத்தில் ஒருபக்கத்திற் பொருந்தி நிற்கிற வீமசேனனை,
அடு கதையால் - கொல்லுதற்குரிய கதாயுதத்தினால், ஓடி முட்டி மோத -
விரைந்து சென்று நெருங்கித் தாக்க, (எ - று.) - 'அமராடினர்' என வருங்
கவியோடு முடியும்.

     உகாமே- 'மே' விகுதிபெற்ற எதிர்மறை வினையெச்சம்.  உதறுதல் -
சிதற அசைத்து வீசுதல்.  மாமேகமொத்தகாயம் - நிறத்தில் உவமம். 
'வரட்சி'என்றும், 'அருகொருபார்மேவி' என்றும் பாடம்: பொருள்
அதுவே.                                               (177)

வேறு.

178-இருவரும் கடும்போர்செய்தல்.

ஓம வுண்டிகொள் பேரழ லோடட லூதைவெஞ்சம ராடியவாறென
ஆம ரங்களி னான்மதி யாதம ராடுகின்றநி சாசர ராமென
வீம னுந்துரி யோதன நாமனும் வேகமொன்றிய வீரிய ராயடு
சேம வன்கதை யாலம ராடினர் தேறிநின்றவர் வாள்விழி
                                             மூடவே.

     (இ -ள்.) ஓமம் உண்டிகொள் - (மந்திரபூர்வகமாக) ஓமஞ்
செய்யப்படும்(ஹவிஸ் ஆகிய) உணவை உட்கொண்டு வளருந்தன்மையுள்ள,
பேர்அழலோடு - பெரிய நெருப்புடனே, அடல் ஊதை - வலிமையையுடைய
காற்று, வெம் சமர் ஆடிய ஆறு என - கொடிய போரைச்
செய்தாற்போலவும்,-மதியாது-லட்சியஞ்செய்யாமல் [அலட்சியமாக], ஆ
மரங்களினால் அமர் ஆடுகின்ற - ஆச்சாமரங்களைக்கொண்டு போர்
செய்கிற,நிசாசரர் ஆம் என - அரக்கர்கள் போலவும்,-வீமனும் துரியோதன
நாமனும்-வீமசேனனும் துரியோதனனென்னும் பேரையுடையவனும், வேகம்
ஒன்றியவீரியர் ஆய் - உக்கிரம் பொருந்திய பராக்கிரமமுடையவராய், தேறி
நின்றவர்வாள் விழி மூட - பார்த்துக்கொண்டுநின்ற வீரர்கள்
(காணுதற்குக்கூசி)ஒளியுள்ள தங்கள் கண்களை மூடிக்கொள்ளும்படி, அடு
சேமம் வல் கதையால்அமர் ஆடினர் - பகையழிப்பனவும்
காவலாகவுள்ளனவுமான வலியகதாயுதங்களாற் போர் செய்தார்கள்; (எ - று.)

    நெருப்புங் காற்றும் ஒன்றோடொன்று போர்செய்தாற்போல என்பது,
முதலடியின் பொருள்.  ஓமவுண்டி - நெய்முதலிய தேவருணவுகள்.  ஓமம் -
மந்திரஞ் சொல்லி நெருப்பிலிடப்படுவது.  பெரியமரமாதலின்,
ஆச்சாமரத்தைக்கூறினார்.  ஆம் மரங்களினால் எனப் பதம் பிரித்து,
கிடைத்தமரங்களைக்கொண்டு என்று உரைத்தலும் ஒன்று.  நிசாசரர் -
இரவில் (வலிமைகொண்டு) சஞ்சரிப்பவர்; அரக்கர்க்குப்பகலினும் இரவில்
வலிமைமிகுதியாதலின், இப்பெயர்.  தேறிநின்றவர் - சாட்சியாகப்பார்த்து
நின்றகண்ணன் பலராமன் முதலியோர்.

    இதுமுதல் எட்டுக்கவிகள் - முதற்சீர் தேமாச்சீரும், இரண்டு மூன்று
நான்காஞ்சீர்கள் கூவிளச்சீர்களுமாய் நேரசை முதலதாதலின் ஒற்றொழித்துப்
பதினோரெழுத்துப் பெற்றுவந்தது அரையடி