காணும்படிதனது தொடையிற் கைவைத்துநின்றன னென்பதாம். கண்ணன்கூறிய உபாயத்தை அருச்சுனன் இங்கிதத்தால் வீமனுக்குப் புலப்படுத்தின னென்க. கொடியதுஷ்டனான துரியோதனனது நாசம் பூமிபாரந்தீர நிவிருத்தியாதற்கும், பாண்டவரது வாழ்க்கைக்கும் காரணமாதலால்,'புவிபாரமும்ஏதமுங்கெட ஏதமில்ஐவரும் வாழத்திருவாய்மலர்ந்த சொல்'எனப்பட்டது. ஊழினும் என்ற உம்மை - உயர்வுசிறப்பு: அது "ஊழிற்பெருவலியாவுள மற்றொன்று, சூழினுந்தான்முந்துறும்" என்றபடிஊழ்வினைக்குள்ள தவறாத உறுதிநிலையை விளக்கும். 'ஊழினும் புரிதாள்வலிதே' என்பதை "ஊழையு முப்பக்கங் காண்ப ருலைவின்றித்,தாழாதுஞற்றுபவர்" என்ற திருக்குறளினாலும் அறிக; 'ஊழ் ஒருகாலாகஇருகாலாக அல்லது விலக்கலாகாமையின், பலகால் முயல்வார் பயனெய்துவர்;தெய்வத்தான் இடுக்கண்வரினும் முயற்சி விடற்பாலதன்று' என்ற அதன்உரைவாக்கியங்கள் உணரற்பால.
ஏழ்கடல் - உவர்நீர், கருப்பஞ்சாறு, கள், நெய், தயிர், பால், நன்னீர் என்னும் இவற்றின் மயமானவை. நாரணன் - நாராயணனென்பதன் விகாரம்: 'ஆர்' என்ற பலர்பால்விகுதி, உயர்வுப்பொருளில் வந்தது. கூறியென்ற பொருளில், 'திருவாய்மலர்ந்து' என்பது, உபசாரம். பின்னிரண்டடிகளுக்கு - ஊழ்வினையினும் முயற்சியே வலிமையுடையது என்று வாயாற் சொல்லிக் கையால் தொடையைத் தட்டினான் என்று உரைப்பாருமுளர்; ஊழினும் புரிதாள்வலிதே' என்றது, முயற்சியைக் கைவிடாது மேன்மேலும் போர்செய் என்றுவீமனுக்கு உறுதி கூறியவாறு. (183) 184.-அதனையறிந்து வீமன்துரியோதனன் தொடையில் தாக்கல். ஞானபண்டிதன்வாயுகுமாரனுநாரணன்பணியாலிளையோன்மொழி மோனவண்குறிதானுணராவெதிர்மோதினன்கதைபூபதியூருவின் மானகஞ்சுகனாறடியேழடிமாறிநின்றிடவேபிழைபோதலின் மேன்முழங்கினவானவர்தூரியமேல்விழுந்ததுபூமழைசாலவே. |
(இ -ள்.) ஞான பண்டிதன் - அறிவுவல்லவனான வாயு குமாரனும் - வாயுவின் மகனானவீமனும், நாரணன் பணியால் இளையோன் மொழி மோனம் வண்குறி தான் உணரா - கண்ணபிரானது வார்த்தையினால் தனது தம்பியான அருச்சுனன் தெரிவித்த மௌனமான நல்லகுறிப்பைத் தான் அறிந்துகொண்டு, பூபதி ஊருவின் - துரியோதனராசனது தொடையிலே, கதை - தனதுகதாயுதத்தால், எதிர் மோதினன் - எதிர்த்துத்தாக்கினான்; (தாக்கவே), மான கஞ்சுகன் - மானத்தையேகவசமாகக்கொண்ட துரியோதனன், ஆறு அடிஏழு அடி மாறி நின்றிட - ஆறு அல்லது ஏழடிதூரம் கால்கள் நிலைபெயர்ந்துபின்னிட்டு நிற்க, பிழை போதலின் - (உறுதிநிலை) தப்பிப்போனதனால்,வானவர் தூரியம் - தேவதுந்துபிவாத்தியங்கள், மேல் முழங்கின - வானத்தில்மிக ஒலித்தன; பூமழை - |