187.-வீமன் துரியோதனனைச்சிதைத்து வீழ்த்துதல். கதுப்பும்வாயுநெரியக்கதாயுதகரத்தினானனிகலக்கினான் எதிர்த்தயானையையடர்த்தகேசரியெனப்பொன் மௌலியையிருத்தினான் உதைத்துமேலிருபதத்தினாலவன்உரத்தைவா குவையொடித்துநீள் விதத்தினாலிருநிலத்தின்மீதுடல்விதிர்த்துவீழ்தர விழுத்தினான். |
(இ -ள்.) கதுப்பும் - (துரியோதனனது) கன்னமும், வாயும் -, நெரிய -நொருங்கும்படி, (வீமன்), கதாயுத கரத்தினால் - கதாயுதத்தையேந்திய (தனது)கையால், நனி கலக்கினான் - மிகவுங்கலங்கச் செய்து,- எதிர்த்த யானையைஅடர்த்த கேசரி என - எதிர்த்துநின்ற யானையை நெருங்கிப் பொருதழிக்கிறசிங்கம்போல, பொன் மௌலியை - பொன்மயமான (அவனது) கிரீடத்தை,இருத்தினான் - தரையிலே அழுந்தப்பண்ணி,-மேல் - மேலே, இரு பதத்தினால்- (தனது) இரண்டுகால்களாலும், உதைத்து-, அவன் - அத்துரியோதனனுடைய, உரத்தை - மார்பையும், வாகுவை - தோள்களையும், ஒடித்து - முறித்து, நீள் விதத்தினால் - மிக்கபலவகைகளால், உடல் விதிர்த்து - அவனுடம்பை உதறி, இரு நிலத்தின் மீது - பெரியதரையிலே, வீழ்தரவிழுத்தினான் - விழுமாறு செய்தான்; (எ - று.) நனி -மிகுதிப்பொருளுணர்த்தும் விசேடித்த உரிச்சொல். சிங்கம் யானையை மத்தகத்திற் பாய்ந்து அழித்தல் இயல்பாதலின், வீமன் துரியோதனனது முடியை யழுத்துதற்கு உவமைகூறப்பட்டது. விதிர்த்து வீசினன்வியக்கவே என்றும் பாடம். (187) 188.-இதுவும், அடுத்தகவியும்- துரியோதனன் கண்ணனைப் பழித்தல். நிறத்தநீலகிரியொக்கவேயிருநிலத்தின்வீழ்குருகுலத்தினோன் உறைத்துமீளவுமுயிர்த்துமாயனொடுருத்து வாசகமுறச்சொல்வான் குறிப்பினால்விசயனைக்கொடாருயிர் குறிக்குமாமதிகொளுத்தினாய் அறத்தினாலடன்மறத்தினீர்மையையவித்தையாயருமளப்பரோ. |
இதுமுதல் மூன்று கவிகள் - ஒரு தொடர். (இ -ள்.) நிறத்த - நிறம்விளங்கப்பெற்ற, நீல கிரி ஒக்க - நீலரத்தினமயமானதொரு மலைபோல, இரு நிலத்தின் வீழ் - பெரியதரையிலேவிழுந்திட்ட, குரு குலத்தினோன் - குருவம்சத்து அரசனான துரியோதனன்,மீளவும்-பின்பு, உறைத்து - உறுதிபெற்று, உயிர்த்து - பெருமூச்சுவிட்டு, உருத்து- கோபங்கொண்டு, மாயனொடு - கண்ணபிரானுடன், வாசகம் -வார்த்தைகளை, உற சொல்வான் - அதிகமாகப்பேசுபவனானான்;(அவை யாவையெனின்):- (நீ), குறிப்பினால் - குறிப்பாக, விசயனை கொடு -அருச்சுனனைக்கொண்டு, ஆர் உயிர் குறிக்கும் மாமதி கொளுத்தினாய் -(எனது) அரிய உயிரைக்குறிக்கும் [என்னுயிர் உடம்பினின்று நீங்குமாறு](வீமனுக்குச்) சிறந்த அறிவை உண்டாக்கினாய்; அறத்தினால் அடல் -தருமத்தோடு போர்செய்கிற, மறத்தின்- |