(இ -ள்.) கதை எடுத்து - கதாயுதத்தையேந்தி, உடற்றும் - போர் செய்கிற, ஆடவர்கள் - வீரர்கள், கடிதடத்தினுக்கு மேல் ஒழிய இடைக்கு மேல் அடிப்பதேயல்லாமல், தொடையில் -, அதிர்வு உற துடிப்புண்டாம்படி, புடைப்பரோ - அடிப்பார்களோ? [அடியார் என்றபடி]; (அன்றியும்), முடியில்- தலையில், அடி பட - கால்படும்படி, துகைப்பரோ - உதைப்பார்களோ? [உதையார்என்றபடி]; (அங்ஙனமன்றி இப்பொழுது தொடையிலடித்தும் முடியில்உதைத்தும்), எதிரியை - தன்பகைவனான துரியோதனனை, சலத்தினால் -மாறுபாடுகொண்ட வயிரத்தால், என் விழி எதிர் - எனது கண்ணெதிரிலே,வழக்கு அழித்த - நீதியின்றி அழித்திட்ட, பாவனனை - வாயுகுமாரனானவீமனை, முதுகு இட யானும் புடைப்பல் - புறங்கொடுக்கும்படி நான்தாக்குவேன், என - என்று சொல்லி, (பலராமன்), முசல கைத்தலத்தொடு -உலக்கையை ஆயுதமாக ஏந்திய கையுடன், ஓடினன் - (வீமன்மேல்) விரைந்துசென்றான்; (எ - று.)
பலராமனுக்குக் கலப்பையேயன்றி உலக்கையும் உரிய ஆயுதமெனவுணர்க. ஆடவர் - ஆண்மையையுடையவர். அதிர்வுற - நடுங்க. அடி பட - ஊறுபட எனினுமாம். வழக்கழித்த - யுத்ததருமத்தை அழியச்செய்த. எதிரி - எதிர்த்தவன்; இ - கருத்தாப்பொருள் விகுதி. இச்செய்யுள் - முதற்சீரும் நான்காஞ்சீரும் கருவிளச்சீர்களும், இரண்டாஞ்சீருங் ஐந்தாஞ்சீரும் புளிமாச்சீர்களும், மூன்றாஞ்சீரும் ஆறாஞ்சீரும்கூவிளங்காய்ச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட அறுசீராசிரியச்சந்தவிருத்தம்.-தனனனத் தனத்த தானனன தனனனத் தனத்த தானனனஎன்பது, அதற்குச் சந்தக்குழிப்பு. (192) வேறு. 193.-பலராமனுக்குக் கண்ணன்சமாதானங் கூறத் தொடங்கல். மதியிரவியோடுபோர்செயுமாறெனவலியதிறல்வீமன்மேலி வனோடலும், இதயமலர்தோறுமேவருநாயகனிவனை விரைவோடுபோய் விலகாவிரு, பதுமநிகரானதாள்பணியாமிகு பரிவினொடுசீறுமாண்மை தகாதென, அதிமதுரவாய்மையால் வெகுளாவகையடிகளிவைகேண் மினோவெனவோதினான். |
(இ -ள்.) மதி - சந்திரன், இரவியோடு - சூரியனுடனே, போர் செயும் ஆறு என - போர் செய்யச்செல்லும்விதம்போல, இவன் - பலராமன், வலியதிறல்வீமன்மேல் - வலிய வெற்றியையுடைய வீமன் மீது, ஓடலும் - (போர்செய்தற்கு) விரைந்து நடந்தவளவிலே,- இதயம்மலர் தோறும் மேவருநாயகன் - (பிராணிகளுடைய) உள்ளத்தாமரைமலர்களிலெல்லாம் பொருந்தியுள்ள தலைவனான கண்ணபிரான், விரைவோடு போய் - துரிதமாகச்சென்று, இவனை விலகா - இந்தப்பலராமனைத் தடுத்து, பதுமம்நிகர் ஆனஇரு தாள் பணியா - |