பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்147

தாமரைமலருக்கு ஒப்பான இரண்டு பாதங்களிலும் விழுந்து நமஸ்கரித்து,
வெகுளா வகை - (அவன்) கோபங்கொள்ளாதபடி, அதிமதுரம் வாய்மையால்-
மிகவும் இனிமையான வார்த்தைகளால், மிகு பரிவினொடு சீறும் ஆண்மை
தகாது என - '(துரியோதனன் பக்கலுள்ள) மிக்க அன்போடு 'நீ கோபங்
கொள்ளுந்திறம் தகுதியன்று' என்று சொல்லி, அடிகள் இவை கேண்மினோ
என - பெரியோய்! இவற்றைக்கேளும்' என்றுங்கூறி, ஓதினான் - (சில)
சொல்பவனானான்; (எ - று.)

    பலராமனது வெண்ணிறமும், அவனினும் வீமன் மிக்கவலிமை
யுடையானென்பதும் தோன்ற, பலராமன் வீமனொடுபோர் தொடங்குதற்குச்
சந்திரன் சூரியனோடு போர்தொடங்குதலை உவமைகூறினார்;
இல்பொருளுவமை. இதயமலர் - ஹ்ருதயகமலம்; "மலர்மிசை யேகினான்"
என்றபடி எல்லோருள்ளத்திலும் எம்பெருமான் குடிகொண்டிருப்பவ னென்க.
விலகா = விலக்கா; பிறவினைப்பொருளில் வந்த தன்வினை.  மிகுபரிவு -
வரம்புகடந்த அன்பு.  மிகுபரிவினோடு சீறும் என இயையும். 
மிகுபரிவினோடுஓதினான் என இயைத்துப் பாண்டவர்பக்கல்
மிக்ககருணையுடனே கண்ணன்கூறினானெனினும் அமையும்.  பத்மம்,
அதிமதுரம் - வடசொற்கள்.  வாய்மை- உண்மையான சொல்.  அடிகள் -
பாதா: என்னும் வடசொல்லின்மொழிபெயர்ப்பாய் நின்று பெரியோரைக்
குறிக்கும்.  அடிகள் கேண்மின்என்றது, உயர்வுப்பன்மை.

    இச்செய்யுள் - முதற்சீரும் ஐந்தாஞ்சீரும் கருவிளங்காய்ச்சீர்களும்,
இரண்டாஞ்சீரும் ஆறாஞ்சீரும் தேமாச்சீர்களும், மற்றைநான்கும்
கூவிளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்டஎண்சீராசிரியச்
சந்தவிருத்தம்.  தனனனன தான தானன தானன தனனனன
தான தானன தானன - என்பது, இதற்குச் சந்தக்குழிப்பு.             (193)

வேறு.

194.-இதுவும், அடுத்த கவியும்- கண்ணன்கூறும்
சமாதானவார்த்தைகள்.

முகுரா னனன்மைந் தனும்வீ மனுமேமுடியா தபெரும்
                          பகையாளர்கள் காண்,
மகிபா லர்திருந் தவையூ டுரையாவழுவாதனவஞ்சினமோ
                                      திநனி,
இகல்வார் சிலையின் குருவா னவர்தாமிடுசா பமுமுண்டு
                              திரௌ பதியார்,
பகர்சா பமுமுண்டதனா லெதிரேபடுமே யிவன்வெங்
                              கதையா லவனே.

     (இ -ள்.) முகுர ஆனனன் மைந்தனும் - கண்ணாடிபோலும்
முகத்தையுடையவனான திருதராட்டிரனதுபுத்திரனாகிய துரியோதனும்,
வீமனும்-,(ஆகிய இருவரும்), முடியாத பெரு பகையாளர்கள் காண் -
(ஒருவரோடொருவர்) முடிவில்லாத மிக்க பகையையுடையவர்களன்றோ?
(அன்றியும்), மகிபாலர் திருந்து அவையூடு - அரசர்கள் அழகிதாகக்கூடியுள்ள
சபையிலே, உரையா - சொல்லுதற்கு அரிய, வழுவாதன - தவறாதவையான,
வஞ்சினம் - சபதவார்த்தைகளை, நனி -