பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்151

                                   பூமழைதேவர்கண்,
முந்த வோட்டிய தேரொடு காய்கதிர் மொய்ம்பன் மேல்கடன்
                              மூழ்கினன் மாலைகொள்,
அந்தி வாய்த்தம பாசறைமேவினரைந்துபார்த்திவ ரானவர்
                                           தாமுமே.

     (இ -ள்.) மைந்தினால் பெரியோன் எனும் - வலிமையினாற்
பெரியவனென்று சொல்லப்படுகிற, வாயுவின் மைந்தனால் - வாயு குமாரனான
வீமனால், துரியோதனன் மா முடி சிந்த - துரியோதனனது பெரியதலை
சிதைய,(அதுகண்டு), நீள் திசை காவலர் - நீண்டதிக்குக்கள்தோறும் நின்று
காவல்செய்கிற திக்பாலகர்கள், ஆர்த்தனர் - மகிழ்ந்து ஆரவாரித்தார்கள்;
தேவர்கள்-, பூ மழை சிந்தி வாழ்த்தினர் - (வீமன்மேற்) பூமாரி சொரிந்து
வாழ்த்துக்கூறினார்கள்; காய் கதிர் மொய்ம்பன் - தபிக்கிற கிரணங்களின்
வலிமையையுடையசூரியன், முந்தஓட்டியதேரொடு - விரைந்து செலுத்துந்
தேருடனே, மேற்கு கடல் முழுகினன் - மேற்குக்கடலில் முழுகினான்
[அஸ்தமித்தானென்றபடி]; மாலை கொள் அந்திவாய் - அந்த அந்தி
மாலைப்பொழுதில், ஐந்து பார்த்திவர் ஆனவர்தாமும் - பாண்டவரைவரும்,
தமபாசறை மேவினர் - தமது படைவீட்டுக்குத் திரும்பிவந்தனர்;

     பாசறை- பகைமேற்சென்றோர் உறையுமிடம்; பாடிவீடெனவும்படும்.
வீமன் பதினாயிரம் யானை பலங்கொண்டவ னாதலால், 'மைந்தினாற்
பெரியோனெனும்' என்ற அடைமொழி அவனுக்குக் கொடுக்கப்பட்டது;
அன்றி,இவ்வடைமொழி, கீழ் 181-ஆங் கவியில் "ஆநிலன் பலவான்"
என்றதைக்குறிப்பதுமாம்.  இவ்வடைமொழி, வாயுவோடு இயைத்தற்குந்தகும்.
முச்சுடர்களுள் முதற்சுடராகிய சூரியன் மற்றை இருசுடராகிய சந்திர
அக்கினியர்போலப் பதினாறு ஏழுகிரணங்களையே யுடையனாகாமல்
ஆயிரங்கிரணங்களோடுங் கூடி அவற்றுட் சிலவற்றை அவ்விருசுடர்க்குங்
கொடுத்து வாங்குந் தன்மையனாய்ச் சிறத்தலால், "காய்கதிர்மொய்ம்பன்"
எனப்பட்டான்.  மேற்கு + கடல் = மேல்கடல், "திசையொடு திசையும்"
என்னுஞ் சூத்திர விதி.  சிலப்பதிகாரத்தில் 'அந்திமாலைச் சிறப்புச்
செய்காதை'என்றாற்போல, 'மாலைக்கொளந்தி' என்றார்; அங்கு அந்திமாலை
என்பதற்கு -'அந்திக்காலத்துமாலை' என்று பொருள்கூறியுள்ளார்
அடியார்க்குநல்லார்.மாலையென்ற சிறப்புப் பெயர் முன்வந்ததனால், பின்
வந்த அந்திஎன்றசிறப்புப்பெயரைப் பொதுப்பெயர்ப்பொருளதாய்க்
காலமென்பது மாத்திரமாக்கிமாலைப்பொழுதெனப் பொருளுரைக்க,
'மாலைகொளந்தி' என்பது இனம்விலக்கவந்த அடைமொழி யென்றல், நேர். 
வாய் - ஏழனுருபு.  தம, அ -ஆறனுருபு; "ஆறனொருமைக்கு அதுவும்
ஆதுவும், பன்மைக்கு அவ்வும்உருபாம்" என்ற வரையறை நியதியன்
றாதலால், இங்கு அகரவுருபு,பாசறையென வருமொழி ஒருமையாயிருக்கையில்
வந்தது; இனி இங்கு, அ -சாரியையென்றலும் ஒன்று, பிருதிவி - பூமி;
பிருதுவென்னும் அரசனாற்சீர்திருத்தப்பட்டது; பார்த்திவர் -
பிருதிவியையாள்பவர்.

    இச்செய்யுள்-கீழ் 178-ஆங் கவிபோன்ற சந்தக்கட்டளைக்கலிப்பா. 
தந்ததாத்தன தானன தானன தந்த தாத்தன தானன தானன - என்பது,
இதற்குச்சந்தக்குழிப்பு.                                      (197)