பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்157

பொறாமைஅணுகப்பெறாத, ஏற்றமும் - உயர்வையும், இரு நிலம் மதித்திட-
பெரிய உலகத்திலுள்ளார் கொண்டாடும்படி, இனிது கோல் ஓச்சுதல் -
(யாவர்க்கும்) இனிமையாகச் செங்கோல் செலுத்தல், நிருபர்க்கு இயல்பு -
அரசர்களுக்குரிய இயற்கை, எனும் - என்கிற, முறைமையோ - ஒழுங்கையோ,
பார்த்திலை - சிறிதும் நோக்கினாயில்லை; நரை கெழு முடி தலை -
நரைத்தல்பொருந்திய மயிர்முடியையுடைய தலையையுடைய, என் பிதா -
எனது தந்தையான துரோணனும், மீ படு நதி மகன் - மேலுலகத்திற்
பொருந்திய ஆகாசகங்காநதியின் குமாரனான பீஷ்மனும், முறித்த வில்
விதுரனே - ஒடித்தெறிந்த வில்லையுடைய விதுரனும், போல் - என்னும்
இவர்போன்ற, பல குரவரும் - மற்றும் பலபெரியோர்களும், உரைத்த -
சொன்ன, சொல் உறுதி - உறுதிமொழிகளை, நீ கேட்டிலை - நீ கேட்டு
அவற்றின்படி நடந்தாயில்லை; (எ - று.)

     அருள்நீதி முறைமை இன்சொல் அறம் என்னும் இவை அடைதற்கு
உரியவை என்றும், கடுஞ்சொல் அதருமம் பொறாமை கொடுங்கோன்மை
என்னும் இவை அடைதற்குரியவையல்ல என்றும் சிறிதும் உணராமல், நீ
அருளின்றி நீதியழிந்து கடுஞ்சொற்கூறி அறத்தைக் கைவிட்டுப் பொறாமை
பூண்டு பழிப்படைந்து கொடுங்கோல் செலுத்தினாய்; இங்ஙனம்
தானறியாமையோடு அறிவுடைய பெரியோர் பலர் நீதிபோதிக்கக் கேட்டு
அவற்றின்படி நடவாமல் அவற்றை யிகழ்தலுஞ்செய்தாய்; ஆதலின்,
இப்படிப்பட்ட இழிவான நிலைமையை யடைந்தாயென்றபடி.  அறிவினாலும்
ஒழுக்கத்தாலுமாகிய முதிர்ச்சியோடு பிராயமுதிர்ச்சியையு முடைமையைக்
காட்டுவான், 'நரைகெழுமுடித்தலை' என்ற அடைமொழிகொடுத்தான்.  இந்த
அடைமொழி, துரோணன் வீடுமன் விதுரன் என்ற மூவர்க்கும் உரியது.

    அருளாவது - தொடர்புபற்றாது இயல்பாக எல்லாவுயிர்களின் மேலும்
செல்வதாகிய கருணை.  வழங்குவது வழக்கு என ஏதுப்பெயர்.  அழுக்காறு
எனினும், அழுக்கறுத்தலெனினும் ஒக்கும்;  அழுக்காறு - அழுக்கறு என்ற
முதனிலை திரிந்ததொழிற்பெயர்.  அழுக்கறு - ஒருசொல்;  அழுக்கு அறு
எனப்பிரித்து, குற்றத்தை நீக்குதலெனப் பொருள்தரக்கூடிய இது -
குற்றமுடையனாதலென்ற பொருளை யுணர்த்துதலை எதிர்மறையிலக்கணை
யென்றலுமுண்டு.  "கொடுப்பதழுக்கறுப்பான் சுற்ற முடுப்பதூஉ, முண்பதூஉ
மின்றிக் கெடும்" என்றபடி அழுக்காறு தன்னையுடையாரையேயன்றி அவரைச்
சார்ந்தாரையும் அழிக்கும் மிக்ககொடுங்குணமாதலால், இது சமீபத்திலும்
வரவொட்டாதபடி அஞ்சப்படுவ தென்பது தோன்ற, 'அழுக்காறணுகுறா
வேற்றம்' எனப்பட்டது.  நிலம் - இடவாகுபெயர்.  அரசனாற் செய்யப்படும்
நிஷ்பட்சபாதமான முறைமை ஒருபாற் கோணாது செவ்வியகோல்போலுதலால்,
கோலென்றும், செங்கோலென்றுங் கூறப்படும்.  முறைமையோ, ஓ - உயர்வு
சிறப்போடு, கழி விரக்கம்.  நரை - மயிர்வெளுத்தல், முதனிலைத்
தொழிற்பெயர் முறித்தவில் விதுரன் - வில்முறித்த விதுரன்.  குரவர் - குரு
என்பதன்