பார்வதீதேவி ஐந்து பிராயமானவுடனே பரமசிவனை மணஞ்செய்வதற்குத்தவஞ்செய்யவிரும்பியவளாய்த் தன் கருத்தைப் பெற்றோருக்குத்தெரிவிக்கையில் இமயமலை யரையனும் அவன் மனைவியான மேனையுமாகியஅத்தந்தைதாயர்களால் மறுக்கப்பட்டதனால், அவளுக்கு உமையென்று ஒருபெயருண்டாயிற்று; உ, மா என்பதற்கு - அம்மா, வேண்டாம் என்று பொருள். முதலடியில் கிருதபத்மா என்றும், இரண்டாமடியில் 'உமைபத்தாமாயனிவர்,'வயப்போர்' என்றும், மூன்றாமடியில், 'தலை துணிப்பமென' என்றும் பாடம்.
இச்செய்யுள் - பெரும்பாலும் மூன்றாஞ்சீரும் ஏழாஞ்சீரும் மாச்சீர்களும்,மற்றையாறும் காய்ச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்டஎண்சீராசிரியச் சந்தப்போலிவிருத்தம். தானனன தந்தனன தத்தா தானனனதானனன தந்தனன தத்தா தானனன-என்ற சந்தக்குழிப்பு பெரும்பாலும் ஒத்துச்சிறுபான்மை ஒவ்வாமையால், இது சந்தமாகாது சந்தப்போலியாம். (204) ச ல் லி ய ப ரு வ ம் முற்றுப்பெற்றது. ------ |