பக்கம் எண் :

164பாரதம்சௌப்திக பருவம்

வஞ்சினமுரைத்துவந்தனமின்னம்வன்குறட்பாரிடந்தன்னால்
துஞ்சினமெனினுமமையுமென்றெண்ணந்துணிந்தனன்றுயிலறு
                                      கண்ணான்.

     (இ -ள்.) 'இ இரவு அகல்வதன் முன்னர் - இந்த இராத்திரி கழிவதன்
முன், வெம் சினம் உற சென்று - கொடிய கோபம் மிகப்போய், உன் பகை
துணித்து - உனதுபகைவர்களை யொழித்து, மீளுதும் - திரும்பிவருவோம்,'
என - என்று, பல படியும் - பலவகைகளாலும், வஞ்சினம் உரைத்து -
சபதவார்த்தைகளைக்கூறி, எஞ்சின நிருபன் உயிரினை நிறுத்தி -
வலியொடுங்கிய துரியோதனராசனது உயிரை ஒழியாதுநிற்கச்செய்து,
வந்தனம் -வந்தோம்; (ஆதலால்), இன்னம் - இனி, வல் குறள்
பாரிடந்தன்னால் - வலியகுறுகிய வடிவமுடைய பூதத்தால், துஞ்சினம்
எனினும் - நாம்இறந்துவிட்டோமாயினும், அமையும் - தகுதியாம், என்று-,
துயில் அறுகண்ணான் - தூக்கமொழிந்த கண்களையுடையவனாய்,
(அசுவத்தாமன்),எண்ணம் துணிந்தனன் - மனத்தில் நிச்சயித்தான்; (எ-று.)

    பொழுதுவிடிவதற்குள் பகையழித்து மீள்வதாகத் துரியோதனனெதிரிற்
பலசபதங்களைச்சொல்லி அவனுக்கு ஆசையைமூட்டி அதனால் அவன்
அரிதில் உயிர்தரித்திருக்குமாறு செய்துவந்த நாம் சும்மாவிருத்தல் சிறிதுந்
தகுதியன்றாதலின், மீண்டுஞ்சென்று பாசறையுள் நுழையமுயல்வோம்: அங்கு
அப்பூதத்தால் முன்போல ஊறுபட்டுமீளாமல் இனி இறக்க நேரினும் நேர்க
என்று அசுவத்தாமன் இரவிற் கண்ணுறக்கமின்றிச் சிந்தித்தன னென்பதாம்.
செய்த சபதத்தை நிறைவேற்றாது உயிர்வாழ்தலினும் இறத்தலே தகுதியென்று
கருதின னென்க.                                           (209)

6.-அசுவத்தாமன் சிவபூசைசெய்தல்.

எண்ணியகருமமுடியினுமுடியாதொழியுனுமீசனைத்தொழுதல்
புண்ணியமெனுமாறுன்னியாங்கொருதண்பொய்கையிற்புனல்
                                     படிந்தேறிப்
பண்ணியலிசையின்படிவமாந்தெரிவைபங்களைப்பற்பலமலர்
                                       கொண்டு
அண்ணியகருத்திலிருத்தியஞ்செழுத்தாலாகமப்படியடி
                                    பணிந்தான்.

     (இ -ள்.) எண்ணிய கருமம் முடியினும் - நினைத்த காரியம்
(நினைத்தபடியே) முடிவதனாலும், முடியாது ஒழியினும் - (அது அப்படி)
முடியாமற் போவதானாலும், ஈசனை தொழுதல் புண்ணியம் - சிவபிரானைப்
பூசித்தல் நற்றொழிலேயாம், எனும் ஆறு உன்னி - என்ற விதத்தை
ஆலோசித்து, ஆங்கு ஒரு தண் பொய்கையில் புனல் படிந்து ஏறி -
அவ்விடத்திலுள்ளதொரு குளிர்ந்த தடாகத்தில் நீராடிக் கரையேறி, பண்
இயல்இசையின் படிவம் ஆம் தெரிவை பங்கனை - சுவரங்களின்
வடிவமாயமைந்தசங்கீதத்தின் சொரூபமாகிய உமாதேவியை இடப்பக்கத்தில்
உடையவனானசிவபிரானை, அண்ணிய கருத்தில் இருத்தி - பொருந்திய
தன்மனத்திலேநாட்டி, பற்பலமலர்கொண்டு - பலவகைமலர்களை
(அருச்சனைப்பொருளாக)க்கொண்டு, அஞ்சு எழுத்தால் - பஞ்சாக்ஷர
மகாமந்திரத்தைச்சொல்லிக்கொண்டு, ஆகமம்படி - சைவாகமப்படி, அடி
பணிந்தான் -திருவடிகளில் விழுந்து வணங்கினான்; (எ - று.)