அனையான் -வலிய தவத்தையுடைய முனிவர்களுக்குத் தலையிலணியும் இரத்தினம்போலச்சிறந்தவனாய்விளங்குகிற அசுவத்தாமன்,- காசினிமுழுவதும் வென்று கொண்டவர் இவர் என்று எண்ணிஏ - பூலோக முழுவதையும் சயித்துத் தங்களுடையதாக்கிக் கொண்ட பாண்டவர்கள் இவர்களேயென்று நினைத்து, சினத்துடன்கலங்கி - சீற்றத்தினாற் கலக்கமுற்று, வள் தேறல் உண்டவர்தமைபோல் - முதிர்ந்த கள்ளைக் குடித்தவர்போல, மதத்தினால் - களிப்புமயக்கங்கொண்டு அதனால், வாளா - வீணாய், ஒருநொடியினில் - ஒருகைந்நொடிப்பொழுதிலே, தலை துணித்தான் - தலையறுத்திட்டான்; (எ - று.) பாண்டவர்களைக் கொன்றிருந்தால் இவனது சபதம் நிறைவேறுதல் மாத்திரமாவது நிகழக்கூடும்; உபபாண்டவரைக் கொன்றிட்டது அங்ஙனமும் உதவாமல் அவர்கள் குலத்தை நாசம்பண்ணுவதாய் முடிந்து பெரிய பழியையும்பாவத்தையுமே தருகிற கொடுமை விளங்க, 'வாளா தலைதுணித்தான்' என்றார்.'தந்தையரொப்பர் மக்கள்' என்றபடி தந்தையரோடு மைந்தர் வடிவத்திற்சிறிதும் வேறுபாடின்றி விளங்குதற்கு 'சுடரிற்கொளுத்திய சுடரனையார்' எனஉவமைகூறினார். தவத்துக்குத் திண்மை - மனநிலை கலங்காமை.முன்னொருகாலத்திற் பரசுராமரால் கசியபமுனிவர்க்குத் தானஞ்செய்யப்பட்டமைபற்றி, பூமிக்குக் காச்யபீ என்று ஒருபெயர்: அது காசினிஎனத் திரிந்ததென்ப.'சிக்குறக்கலங்கி' என்றும் பாடமுண்டு. (217) 14.-அப்பொழுது சோழன்அசுவத்தாமன்மேற் போருக்கு எழுதல். துருபதன்மைந்தரனைவரும்பஞ்சத்திரௌபதேயருந்துயில் பொழுதிற், புரவியந்தாமாநினைவறப்புகுந்துபொன்றுவித்தனனெனப்புலம்ப, இரவிடையமர்மற்றென்னைகொலென்னா விரவிதன்றிருக்கு லத்திறைவன், பெருமையோடெழுந்தான்பகைவன் மேலவன்முன்பின்னிடப் பொருதிடும்பெரியோன். |
(இ -ள்.) துருபதன் மைந்தர் அனைவரும் - துருபதராசனது புத்திரர்களெல்லோரும், பஞ்சதிரௌபதேயரும் - திரௌபதியினிடத்திற் பிறந்தஉபபாண்டவர்களைந்துபேரும், துயில் பொழுதில் - தூங்கும்பொழுதில், அம்புரவி தாமா - அழகிய அசுவத்தாமன், நினைவு அற புகுந்து - நினைத்தற்கும்இடமில்லாமல் (படைவீட்டினுள்) நுழைந்து, பொன்றுவித்தனன் - (அவர்களை)அழித்திட்டான், என - என்று, புலம்ப - (கண்டவர் யாவரும்) கதறியழ,(அதுகேட்டு),- இரவிடை அமர் என்னை கொல் என்னா - 'இராத்திரியிற் போர்என்னடா?' என்றுசொல்லி யதட்டிக்கொண்டு, அவன் முன் பின்னிடபொருதிடும்பெரியோன் - அந்த அசுவத்தாமன் முன்பு தோல்வியடையும்படி போர்செய்தபெருமையையுடையவனாகிய, இரவிதன் திரு குலத்து இறைவன் - சூரியனதுமேலான குலத்தில் தோன்றிய அரசனான சோழன், பெருமையோடு -பராக்கிரமத்துடனே, பகைவன் |