பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்187

இன்றே -இப்பொழுதே, (யான்சென்று), ஐவர் ஆரம் மணி முடிகொய்து -
பஞ்சபாண்டவர்களுடைய முத்தும் இரத்தினங்களும் பொருந்திய கிரீடத்தைத்
தரித்த தலைகளைத் துணித்து, தரணி எலாம் உன்குடைகீழ் அமைப்பன் -
பூமிமுழுவதையும் உனது ஆளுகையின் கீழ் வைத்திடுவேன்; உள்ளம்
களித்தி -மனங் களிப்பாய், என்று - என்று சொல்லி, சுயோதனற்கு சூள்
உரைத்து -அத்துரியோதனனுக்குச் சபதஞ்செய்து கொடுத்து, மீண்டான் -
இங்கு வந்தான்;(எ - று.)                                   (245)

42.திருகுசினத்தொடுங்கடுகிப்பாசறையிற்புகுதலுமேசெங்
                                 கட்பூதம்,
பெருகுவிழிநீர்சொரியவடர்த்தலும்பின்னிட்டரனைப்பெட்
                                பிற்போற்றி,
முருகிதழிச்சுடரருளும்படைக்கலம்பெற்றிவ்வண்ண
                              முடித்தானம்மா,
குருகுகிரியெறிந்தோனைநிகர்த்தவன்றன்விறலெவர்க்குங்
                                கூறலாமோ.

     (இ -ள்.) (இவ்வாறு துரியோதனனெதிரில் உறுதிமொழி கூறிய
அசுவத்தாமன்), திருகு சினத்தொடும் - உக்கிரங்கொண்ட கோபத்துடனே,
கடுகி- விரைந்து, பாசறையில்புகுதலுமே - (நமது) படைவீட்டில்
நுழையுமளவிலே,செம் கண் பூதம் - (அதற்குக் காவலாக நம்மால்நிறுத்தப்
பட்ட கோபத்தாற்)சிவந்த கண்களையுடைய பூதம், விழி பெருகு நீர்
சொரிய -  கண்களினின்றுமிக்கநீர்வழியும்படி [மிக்கவருத்தமுண்டாகும்படி],
அடர்த்தலும் - நெருக்கிப்பொருத வளவிலே, (அசுவத்தாமன்), பின் இட்டு -
புறங்கொடுத்து, (பின்பு),அரனை பெட்பின் போற்றி - சிவபிரானை
அன்போடு பூசித்து, முருகுஇதழிசுடர் அருளும் படைக்கலம்பெற்று -
வாசனையையுடையகொன்றைப்பூமாலையையுடைய சோதிவடிவமான
அப்பரமசிவத்தாற்கொடுத்தருளப்பட்ட ஆயுதத்தைப் பெற்று, இ வண்ணம்
முடித்தான் -(அவனுதவியால் யாவரையும்) இவ்வாறு அழித்தல்
செய்திட்டான்; குருகுகிரிஎறிந்தோனை நிகர்த்தவன்தன் விறல் -
கிரௌஞ்சமலையை வேல் கொண்டுபிளந்தவனான முருகக்கடவுளை
யொத்தவனான அசுவத்தாமனது வல்லமை,எவர்க்கும் கூறல் ஆமோ -
யாவருக்குஞ் சொல்லி முடிக்கக்கூடியஅளவினதோ? [அன்றென்றபடி];
                                                    (எ - று.)

    அசுவத்தாமனது செய்வினைத்திறத்தையும், ஆற்றலையும் வியந்தவாறு.
முருகு - தேனும், தெய்வத்தன்மையுமாம்.  இதழி - கொன்றை; அதன்
பூமாலைக்கு, இருமடியாகுபெயர்.  குருகு என்ற தமிழ்மொழியும்
கிரௌஞ்சமென்ற வடமொழியும் பரியாயநாமமாதலால், கிரௌஞ்சமலையை,
'குருகுகிரி' என்றார்.   சிவகுமாரனாதலால், அசுவத்தாமனுக்கு முருகக்கடவுள்
உவமை.

     குருகுகிரி யெறிந்த கதை:-சிவபிரான் இளையகுமாரனாய்த்
தேவர்கள்வேண்டுகோளால் அசுரர்களை யொழித்தற்குத் தேவசேனாபதியாம்
பொருட்டுஅவதரித்த முருகக்கடவுள் சூரபதுமனைப்பொருது அழித்தற்குச்
செல்லும்வழியிடையே பெரிய மலைவடிவங்கொண்ட கிரௌஞ்ச னென்னும்
அசுரன்அவனை நலியக்கருதிப்பலவிதமாயைசெய்ய, அதன்மேல்
அப்பெருமான் தனதுதெய்வத்தன்மையுள்ள வேற்படையை யேவி
அதனைப்பிளந்து அழித்திட்டன