சௌப்திக பருவம். அஞ்சுஎழுத்து-பஞ்சாக்ஷர மகாமந்திரம், 6 அடர்த்தல்-போர் செய்தல், 8, 42 அத்தன்-தலைவன், கண்ணபிரான், 45 அந்தமுறுகடன்-இறுதியிற் செய்யும் சடங்கு; அந்திமக்கிரியை, 44 அபாண்டவியம்-அபாண்டவம்;பாண்டவரைக் கருவறுப்பது: இதனைப்பிரமசிரோஸ்திரம் என்றும்,ஐஷீகாஸ்திரம் என்றும் கூறுவர்,43 அமைதல் -தகுதியாதல், 5 அயிர்-நுண்மணல், 31 அரமடநல்லார்-தேவமாதர்கள், 31 அரன்-சிவபிரான், 42 அரி ஹரி, கண்ணபிரான், 45 அலமரல்-வருந்துதல், 1 அலாயுதன்-பலராமன், [அலம்-கலப்பை] 46 அளி -அன்பு, 31; வண்டு, 32 அறைதல்-கூறுதல், 38 ஆ-ஆறு,விதம், 3 ஆகமம்-சைவாகமம்; காமியம் முதலியஇருபத்தெட்டுநூல்கள், 6 ஆகுலித்தல்-அழுதல், 39 ஆடி-கண்ணாடி,35 ஆமோதம்-மிக்க வர்சனை; களிப்பு, 32 ஆரணியம்-வனம், 39 ஆரியன்-முனிவன், 27 ஆனாமல்-அடங்காமல், நீங்காமல், 36 இணை-இரண்டு,3 இதழி-கொன்றை, 42 இதழிச்சுடர்-சிவபிரான், 42 இரவிதன்குலத்து இறைவன் - சோழன்,14, [இரவி-சூரியன்] ஈசனைத்தொழுதல் புண்ணியம், 6 உடற்குறை-கவந்தம், 39 உம்பரூர்-வீரசுவர்க்கம், 37 உயங்குதல் -தளர்தல், 37 உரன்-மார்பு, 3 உருத்து-கோபித்து, 37, 40 உரும்-இடி,36 உழி-இடம்,34, 43 ஊழி-நெடுங்காலம், 46 எஞ்சுதல்-வலியொடுங்குதல், 5 ஏதி-ஆயுதம்,1 ஏறு-ரிஷபம்,7 கங்குல்-இராத்திரி, 4 கடப்பமாலையான்-முருகக்கடவுள், கடவுதல்-ஏறிச்செலுத்துதல், 2 கமலமாலையான்-தாமரை மலர், மாலையையுடைய அசுவத்தாமன் [அந்தணர்க்குரிய மாலை,] 9 கன்றுதல்-வெதும்புதல், 17; வயிரங்கொள்ளுதல், 24 கனல் மூன்று- மூவகை அக்கினி;காருகபத்தியம், ஆகவநீயம், தஷிணாக்கினி என்பன, 33 கனல்மூன்றும் ஒருவடிவாய்ப்பிறந்தனையவியாதன், 33 காசினி-பூலோகம், 13 காலமும்இடனும் அறிந்து அமர் செகுத்தல்கடன், 1 கிளைஞர் -உறவினர், 25 குருகுகிரி-கிரௌஞ்சமலை, 42 குறள்-குறுகியவடிவம், 5 கூற்று-யமன்,வார்த்தை, 24 கொண்டல்-மேகம், 40 கொழுந்து-இளமுளை, 23 கொற்றம்-திறமை, 3 சடையவன்தனயன் - சிவபிரானின் குமாரன்,அசுவத்தாமன், 16 சதாகதி-வாயு; [எப்பொழுதும் சஞ்சரித்தலையுடையான்], 45 சராசனம்-வில், 27 சவுபலை-சுபலராசன்மகளானகாந்தாரி, 35 சாதனன்-ஆசிரியன்[சாதநம்-பயிற்சி], 4 சார்ங்கம்-திருமாலின் வில், 38 |