பக்கம் எண் :

அரும்பதவகராதி முதலியன215

புத்தேளிர்-தேவசாதியார், 32
புரவித்தாமா-அசுவத்தாமன், 14
புறமிடல்-முதுகுகாட்டியோடுதல், 9
பொன்றுவித்தல்-அழித்திடுதல், 14
பொன்னி-காவேரிநதி, 15
மகிபதி-அரசன், 31 [மகி-பூமி]
மகுடம்-தலை[தானியாகுபெயர்], 22
மண்டலீகர்-மண்டலாதிபதிகளான அரசர்கள்,15
மரு-வாசனை, 9
மருத்து-வாயு,காற்று, 37
மாதுலன்-மாமன், 2
மாருதி-மருத்தின்மகன் வீமன்,[தத்திதாந்தநாமம்], 40
மாழ்குதல்-கலங்குதல், 27, 33
மாறு-மாற்றார், பகைவர்;[பண்பாகுபெயர்], 7
மானபங்கம்-மானக்கேடு, அவமானம்,29
முரண்-வலிமை,3
முருக்குதல்-அழித்தல், 17
முருகு-வாசனை,49
மொகுமொகு-ஈரடுக்கு ஒலிக்குறிப்பு; இரட்டைக்கிளவி, 32
மோகரித்தல்-வீராவேசங் கொள்ளல்,11
யாய்-எனதுதாய், 28
வஞ்சினம்-சபதவார்த்தை, 5
வடதரு-ஆலமரம்,4
வயா-ஆசை, 20
வயிரம்-தீராப்பகைமை, 31, 37
வல்லபம்-வல்லமை, 28
வலம்புரித்தார்-நஞ்சாவட்டைப் பூ, வாண்முனி-அசுவத்தாமன், 12
வாரணம்-யானை,2
வாள்-கொடுமை,ஒளி, 37
வாளா-வீணாய்,13
வாளி-அம்பு,22
விடை-எருது, 17
வித்தகன்-சதுரன், 45
விதலை-மனக்கலக்கம், 7
வியாதன்-வியாசன், 33
விலோசனம்-கண், 35
வெயில்புரிவது- சூரியன் உதிப்பது,10
வேண்டும்-உம்விகுதிபெற்ற ஒருவகைவியங்கோள், 45
வேதபண்டிதன்-அசுவத்தாமன் 21
வேற்றுப்பொருள்வைப்பணி, 15

****