பக்கம் எண் :

30பாரதம்சல்லிய பருவம்

(மற்றும்தருமன்)மேல் எதிர்த்துவருகிற, போற்றலன் - பகைவனான
சல்லியனது,ஏற்றமும் - மேம்பாட்டையும், பொறாமல் - (பார்த்து) மனம்
பொறுக்காமல்,-கலவம் மாமயில் ஒழித்து பஞ்சானனம் எழுதிய தனிக்கொடி
கந்தன் -தோகையையுடைய பெரிய மயிலின் வடிவத்தை நீக்கிச் சிங்கத்தின்
வடிவத்தையெழுதிய ஒப்பற்ற துவசத்தையுடைய முருகக்கடவுள் போன்ற
வீமன்,- குலவுதிண்சிலை குரிசிலை - விளங்குகிற வலிய வில்லைக்கொண்ட
வீரனானசல்லியனை, தம் முனை கொண்ட வீரியம் எலாம் கொண்டான் -
தனதுதமையனான தருமனிடத்தினின்று (சல்லியன்) கவர்ந்துகொண்ட
சிறப்புக்களையெல்லாம் தான் அவனிடத்தினின்றுமீண்டும் கவர்ந்து
கொண்டான்;(எ - று.)

     என்றது,தன்தமையனது பாகன் வில் குடை இவற்றை ஒழித்திட்ட
சல்லியனது தேர்ப்பாகனையும்வில்நாணையும்குடையையும் வீமன் தானெய்த
அம்புகளால் அழித்து எதிர்செய்தனன் என்றவாறாம்; சல்லியனால் தருமனுக்கு
உண்டாக்கப்பட்ட வலிமைக்குறைவு இங்ஙனம் தருமனுக்கு வீமன் துணைவந்து
சல்லியனுக்கு எதிர்செய்தலால் ஒழிதல் பற்றி 'தம்முனைக்கொண்ட
வீரியமெல்லாங்கொண்டான்' என்றார்:  இனி, 'கொடுத்தான்' என்ற
பாடத்துக்கு,தருமனுக்கு வீமன் வேறுபாகனையும் வில்லையும் குடையையும்
கொண்டுவந்துகொடுத்தானென்று உரைத்தல் சிறப்பன்று; மேற்கவியில் வருகிற
"தனதுதிண்கையிற் சரத்தினும் தம்பிகைச்சரம் விரைந்துடற்றலின்" என்பதுங்
காண்க.வலவன் - தேர்ப்பாகன். அழுக்கு - தீயசிந்தை.  சுப்பிரமணியமூர்த்தி
தனதுகொடியில் மயில்வடிவை யொழித்துச் சிங்கவடிவைக்கொண்டு
வந்தாற்போன்றவன் வீமனென்றார், வீமனுக்குச் சிங்கக்கொடியாதலின்;
இதனால், பலபராக்கிரமங்களில் வீமன் குமரக்கடவுள் போல்பவனென்பது
பெறப்படும்.  அவனது மயிற்கொடியினும் இவனது சிங்கக்கொடி
ஆற்றலுக்கேற்றதாமென்ற கருத்துந்தோன்றும்.  உபமானத்துக்கு உள்ள
மயிற்கொடியுடைமையினும், உபமேயத்துக்கு உள்ள சிங்கக்கொடியுடைமை
யாகிய உயர்வு தோன்றக் கூறியதனால், இது மிகையொற்றுமையுருவகவணியின்
பாற்படும்.  பஞ்சாநநம் - பஞ்ச-விரிவான, ஆநநம் - முகத்தையுடையது
என்றுசிங்கத்துக்குக் காரணப்பெயர்.  'மனத்தழுக்காறிலா, சிலைக்கணைசில,
வீரியமெலாங்கொடுத்தான், மயிலொழிந்து' என்பன பாடபேதங்கள்.  (28)

29.-வீமனும் சல்லியனும்பொருவதைத் தருமன் பார்த்து
நிற்றல்.

தனதுதிண்கையிற்சரத்தினுந்தம்பிகைச்சரம் விரைந்துடற்ற
                                   லிற்றடைக்கைக்,
கனதனுத்தனை யூன்றிநின்றிருவருங்கணக்கறமலையுமாகண்டான்,
எனது தோள்களிலிளையவன்றனக்குவேறியாதெனுமெண்ணுடை
                                         மனத்தான்,
விநதைகாளையோடுவமைகூர்வலியினான் வேந்தர்யாரினும்
                                     புகழ்மிக்கோன்.

   (இ - ள்.) விநதை காளையோடு - விநதையின்மகனானகருடனோடு,
உவமைகூர்- ஒப்புமை மிக்க, வலியினான்-பலத்தையுடையவனும்,